பிரபல பின்னணிப் பாடகர் அரிஜித் சிங் பின்னணிப் பாடகராக புதிய பணிகளை ஏற்க மாட்டேன் என்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களையும் இசை ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரிஜித் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “அனைவருக்கும் வணக்கம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இத்தனை ஆண்டுகளாக ரசிகர்களாக எனக்கு நீங்கள் அளித்த அளவற்ற அன்பிற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இனிமேல் பின்னணிப் பாடகராக நான் எந்தப் புதிய பணிகளையும் ஏற்கப்போவதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இதோடு நான் விடைபெறுகிறேன். இது ஒரு அற்புதமான பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு பலருக்கு எதிர்பாராததாக இருந்தாலும், அரிஜித் சிங் இசையை முழுமையாக விடுவதில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அவர் தனியாக இசை உருவாக்குதல், சொந்த இசைத் திட்டங்கள், இந்திய கிளாசிக்கல் இசைக்குத் திரும்புதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு கோரிய பணிகளை நிறைவேற்றுவார் என்றும் கூறியுள்ளார்.
சிறு வயதிலிருந்தே கிளாசிக்கல் இசை கற்ற அரிஜித், 2005-இல் Fame Gurukul ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். வெற்றி பெறாவிட்டாலும், அவரது தனித்துவமான குரல் இசையமைப்பாளர்களை கவர்ந்தது.
2011-இல் Murder 2 படத்தில் “Phir Mohabbat” பாடலுடன் திரையிசைப் பாடகராக அறிமுகமானார். 2013-இல் Aashiqui 2 படத்தின் “Tum Hi Ho” பாடல் அவரை இரவோடு இரவாக புகழ் பெற்றவராக்கியது. இதன்பின் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் 24 படத்தில் “நான் உன் அழகினிலே” பாடல் பலரின் ஆல்டைம் ஃபேவரிட்டாக திகழ்கிறது. “Channa Mereya”, “Ae Dil Hai Mushkil”, “Kesariya”, “Sajni” போன்ற பாடல்கள் அவரது குரலின் ஆழத்தை உணர்த்துபவை.
இந்த அறிவிப்பால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சமூக வலைதளங்களில் “இது உண்மையா?”, “அரிஜித் சார் தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்” போன்ற கருத்துகள் பரவலாக பகிரப்படுகின்றன. அவரது குரல் இல்லாத பாலிவுட் இசை எப்படி இருக்கும் என்பதை பலரும் கற்பனை செய்து வருகின்றனர்.
அரிஜித் சிங்கின் இந்த முடிவு இசை உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது பயணத்திற்கு வாழ்த்துகள்!
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge)…