ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாகவே ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளது. இந்த சூழலில், பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் சில கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.
தன்னைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புவதன் மூலம் தனது நற்பெயருக்குக் களம் விளைவிப்பதாகவும், இது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும் கூறி ஆர்த்தி ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆர்த்தி ரவியின் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார்:
பாடகி கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவிக்கு எதிராக எவ்விதமான அவதூறு கருத்துகளையும் பேசவோ அல்லது வெளியிடவோ கூடாது என இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பதியினரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மூன்றாம் நபர் ஒருவர் இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பது சட்டப்படி ஏற்புடையதல்ல என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆர்த்தியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு அவசியமானது என்று நீதிமன்றம் கருதியது.
ஜெயம் ரவி தனது விவாகரத்து முடிவை அறிவித்த பிறகு, பாடகி கெனிஷாவுக்கும் அவருக்கும் இடையிலான நட்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த கெனிஷா, ஆர்த்தி ரவி குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்திருந்தார். இதுவே இந்த சட்டப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
தற்போது நீதிமன்றம் விதித்துள்ள இந்தத் தடை உத்தரவு, சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீது தொடுக்கப்படும் அவதூறுப் பிரசாரங்களுக்கு ஒரு கடிவாலமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.