தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. தற்போது இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான தருண் பாஸ்கருடன் இணைந்து “ஓம் சாந்தி சாந்தி சாந்தி” (Om Shanti Shanti Shantihi) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் ரீமேக்கான இப்படம், ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது.
கடந்த சில வாரங்களாகவே, ஈஷா ரெப்பாவும் தருண் பாஸ்கரும் காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையப் போவதாகவும் கிசுகிசுக்கள் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவின. இதற்கேற்றார் போல, இருவரும் இணைந்து சில ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்திருந்தனர்.
திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈஷாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் நிதானமாகவும் அதே சமயம் நேரடியாகவும் பதிலளித்தார்:
உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எதையும் உங்களால் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த வதந்திகளுக்கு எந்த விளக்கமும் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமானது (திருமணம் போன்ற விஷயங்கள்) ஏதாவது நடந்தால், அதை நானே வெளிப்படையாக அறிவிப்பேன்.
மேலும், தருண் பாஸ்கருடன் தான் செய்த ரீல்ஸ் வீடியோக்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவும், படத்தின் விளம்பரத்திற்காகவும் செய்யப்பட்டவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதே கேள்வியிடம் இயக்குனர் தருண் பாஸ்கரிடம் கேட்கப்பட்ட போது, அவர் ஈஷாவை ஒரு சிறந்த தோழியாகவும், துணையாகவும் கருதுவதாகக் கூறினார். “தனிப்பட்ட விஷயங்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதால், சரியான தருணம் வரும்போது நானே அறிவிப்பேன்” என அவரும் சற்றே மர்மமாகப் பதிலளித்துள்ளது ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஈஷா ரெப்பா தற்போது தனது கவனத்தை முழுமையாகத் திரைப்படங்களில் செலுத்தி வருகிறார். அவரது இந்த தெளிவான பதில், தேவையற்ற வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…