தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஈஷா ரெப்பா. தற்போது இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான தருண் பாஸ்கருடன் இணைந்து “ஓம் சாந்தி சாந்தி சாந்தி” (Om Shanti Shanti Shantihi) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் ரீமேக்கான இப்படம், ஜனவரி 30-ம் தேதி வெளியாகிறது.
கடந்த சில வாரங்களாகவே, ஈஷா ரெப்பாவும் தருண் பாஸ்கரும் காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணையப் போவதாகவும் கிசுகிசுக்கள் கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் தீயாய் பரவின. இதற்கேற்றார் போல, இருவரும் இணைந்து சில ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்திருந்தனர்.
திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈஷாவிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் நிதானமாகவும் அதே சமயம் நேரடியாகவும் பதிலளித்தார்:
உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத எதையும் உங்களால் திட்டமிட முடியாது. சரியான நேரத்தில் சரியான விஷயங்கள் நடக்கும் என்று நான் நம்புகிறேன். அதனால் இந்த வதந்திகளுக்கு எந்த விளக்கமும் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என் வாழ்க்கையில் முக்கியமானது (திருமணம் போன்ற விஷயங்கள்) ஏதாவது நடந்தால், அதை நானே வெளிப்படையாக அறிவிப்பேன்.
மேலும், தருண் பாஸ்கருடன் தான் செய்த ரீல்ஸ் வீடியோக்கள் அனைத்தும் நகைச்சுவைக்காகவும், படத்தின் விளம்பரத்திற்காகவும் செய்யப்பட்டவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இதே கேள்வியிடம் இயக்குனர் தருண் பாஸ்கரிடம் கேட்கப்பட்ட போது, அவர் ஈஷாவை ஒரு சிறந்த தோழியாகவும், துணையாகவும் கருதுவதாகக் கூறினார். “தனிப்பட்ட விஷயங்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதால், சரியான தருணம் வரும்போது நானே அறிவிப்பேன்” என அவரும் சற்றே மர்மமாகப் பதிலளித்துள்ளது ரசிகர்களிடையே இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஈஷா ரெப்பா தற்போது தனது கவனத்தை முழுமையாகத் திரைப்படங்களில் செலுத்தி வருகிறார். அவரது இந்த தெளிவான பதில், தேவையற்ற வதந்திகளுக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.