பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரிலும் புகைப்படத்திலும் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயற்சிப்பதாக நடிகை தானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவிட்ட ரகுல், “என்னைப் போலவே வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து யாரோ ஒருவர் மற்றவர்களுடன் சாட் செய்து வருவது தெரியவந்துள்ளது. அது நான் இல்லை… அது என்னுடைய எண் கூட இல்லை! அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். உடனே ‘பிளாக்’ செய்துவிடுங்கள்” என்று தெளிவாக எழுதியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளால் பாதிக்கப்பட்டதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு ரகுல் ப்ரீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற மோசடி கணக்குகளை உடனடியாக வாட்ஸ்அப் நிறுவனத்திடமும் புகார் அளிக்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இயக்குநர் கெந்திரன் வி இயக்கத்தில், ஜல்லிக்கட்டு மற்றும் வட மஞ்சுவிரட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது.
எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் எம். மூர்த்தி தயாரிப்பில், “தீர்ப்புகள் விற்கப்படும்” மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தீரன் அருண்குமார் இப்படத்தை…
47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரையுலகின் இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து…
தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவரும் பல தசாப்தங்களுக்குப்…
கோலிவுட்டின் 'மல்டி-டேலண்ட்' கலைஞரான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தனது திரையுலக பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லான 'மீசைய முறுக்கு'
2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'.