பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரிலும் புகைப்படத்திலும் போலி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடி செய்ய முயற்சிப்பதாக நடிகை தானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஸ்கிரீன்ஷாட்டுடன் பதிவிட்ட ரகுல், “என்னைப் போலவே வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து யாரோ ஒருவர் மற்றவர்களுடன் சாட் செய்து வருவது தெரியவந்துள்ளது. அது நான் இல்லை… அது என்னுடைய எண் கூட இல்லை! அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். உடனே ‘பிளாக்’ செய்துவிடுங்கள்” என்று தெளிவாக எழுதியுள்ளார்.
இதற்கு முன்பு நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகளால் பாதிக்கப்பட்டதாக பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களும் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு ரகுல் ப்ரீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற மோசடி கணக்குகளை உடனடியாக வாட்ஸ்அப் நிறுவனத்திடமும் புகார் அளிக்குமாறு ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…