திரைத்துறை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் 1965-களின் மொழிப் போராட்டத்தை மையமாக வைத்து வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கடந்த ஜனவரி 10-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளியான 11 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்பயணத்தில் ஹாட்ரிக் 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்த நடிகராக உருவெடுத்துள்ளார்.
‘சூரரைப் போற்று’ புகழ் சுதா கொங்கராவின் நேர்த்தியான இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. சிவகார்த்திகேயனின் முதிர்ச்சியான நடிப்பு, வில்லனாக மிரட்டிய ரவி மோகன் (ஜெயம் ரவி), அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின் பங்களிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் 100-வது படமான இதில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் மொழிப் போராட்டத்தின் உணர்வை அப்படியே திரையில் கொண்டு வந்தன.
மக்கள் மத்தியிலும், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’, கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும் வசூல் ரீதியாகத் தன்னை ஒரு வெற்றித் திரைப்படமாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பொங்கல் விடுமுறை முடிந்து வார நாட்களிலும் படம் கணிசமான வசூலை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…