தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படங்களில் ஒன்றான 2002ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தில் தனுஷ் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அபிநய் (அபிநய் கிங்கர்). இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான இப்படம் தனுஷ், ஷெரின் உடன் அபிநயையும் அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு ‘ஜங்ஷன்’, ‘சிங்கார சென்னை’, ‘சக்சஸ்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘தாஸ்’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், சிலவற்றில் நாயகனாகவும் நடித்து வந்தார். மலையாள படங்களிலும் நடித்த அபிநய், வித்யுத் ஜாம்வால் (துப்பாக்கி, அஞ்சான்), மிலிந்த் சோமன் (பையா) போன்றோருக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றினார்.
44 வயதான அபிநய், கடந்த சில மாதங்களாக கல்லீரல் சிரோசிஸ் (Liver Cirrhosis) நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிரைக் காப்பாற்ற ரூ.28 லட்சம் தேவை என அவர் வீடியோ வெளியிட்டு உதவி கோரிய நிலையில், நடிகர் தனுஷ் ரூ.5 லட்சமும், KPY பாலா ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கினர். இதனால் ஓரளவு நலமடைந்த அபிநய், சில சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 10, 2025) அதிகாலை 4 மணி அளவில் அபிநய் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பெரிய அளவில் உறவினர்கள் இல்லை எனவும், ஓரிரு நண்பர்கள் மட்டுமே உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை ரங்கராஜபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த அபிநயின் உடல், போலீசார் உதவியுடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்கு கூட உறவினர்கள் இல்லாத நிலை தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய விருது பெற்ற மலையாள நடிகை டி.பி. ராதாமணியின் மகனான அபிநய், தாயார் 2019இல் புற்றுநோயால் இறந்த பிறகு நிதி ரீதியாகவும், உடல்நல ரீதியாகவும் பெரிதும் அவதிப்பட்டார். அரசு மெஸ்ஸில் உணவு உண்டு வாழ்ந்த நாட்களும் உண்டு என அவர் கூறியது ரசிகர்களை வருத்தமடையச் செய்தது.
அபிநயின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் இழப்பாக கருதப்படும் இந்த சோகம், நடிகர்களின் வாழ்க்கை எத்தகைய போராட்டங்களை கொண்டிருக்கும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
இளைப்பாறட்டும் அபிநய்…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…