பாலிவுட் துறையின் மூத்த நடிகர் தர்மேந்திரா (89), மும்பையின் பிரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து இன்று அதிகாலை வீடு திரும்பினார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குடும்பத்தினர் அவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்தச் செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்திரா கடந்த நவம்பர் 1 அன்று வழக்கமான உடல்நலச் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், நவம்பர் 10 அன்று சுவாசச் சிரமம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் அவரது இறப்பு தொடர்பான தவறான செய்திகள் பரவினதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும், அவரது மனைவி ஹேமா மாலினி, மகள் ஈஷா தியோல் உள்ளிட்ட குடும்பத்தினர் அவர் நலம்பெற்றிருப்பதாக உறுதியளித்தனர்.
இன்று அதிகாலை 7:30 மணிக்கு தர்மேந்திரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது சிகிச்சை மருத்துவர் புரோஃபெசர் பிரதீப் சம்தானி கூறுகையில், “தர்மேந்திரா ஜி இன்று அதிகாலை மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். குடும்பத்தினர் வீட்டில் சிகிச்சை தொடர விரும்பியுள்ளனர். அவரது நிலைமை நிலையானது” என்றார். அம்புலன்ஸ் மூலம் அவரை ஜூஹுவில் உள்ள தனது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், சொல்லப்படுகிறது .
தியோல் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “திரு தர்மேந்திரா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் மீட்பு சிகிச்சை பெறுவார். இந்த நேரத்தில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் ஊகங்களைத் தவிர்த்து, குடும்பத்தின் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அவரது மீட்பு, உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்காக அனைவரின் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் நல்ல நேரங்களுக்கு நன்றி. அவர் உங்களை நேசிக்கிறார், தயவுசெய்து அவரை மதியுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.