இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற இசையமைப்பாளராகத் திகழும் இசைஞானி இளையராஜா, மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள 11-வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் (AIFF) மதிப்புமிக்க ‘பத்மபாணி’ (Padmapani Award) விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிர அரசு ஆகியவற்றின் ஆதரவுடன், மராத்வாடா கலை மற்றும் கலாச்சார அறக்கட்டளை இந்த விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த 11-வது பதிப்பு, மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்னாள் அவுரங்காபாத்) உள்ள MGM வளாகத்தில் வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 1, 2026 வரை நடைபெற உள்ளது.
திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை படைத்தவர்களுக்காக வழங்கப்படும் இந்த ‘பத்மபாணி’ விருதுக்கு, இளையராஜாவைத் தேர்வு செய்த தேர்வுக் குழுவில் பின்வரும் முக்கியப் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர்:
லத்திகா பட்கோங்கர் (தலைவர், திரைப்பட விமர்சகர்)
அசுதோஷ் கோவாரிகர் (இயக்குநர் – ‘லகான்’ புகழ்)
சுனில் சுக்தங்கர்
சந்திரகாந்த் குல்கர்னி
விருதின் சிறப்பம்சங்கள்:
பத்மபாணி நினைவுச் சின்னம் (Memento).
கௌரவச் சான்றிதழ்.
ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பரிசு.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது கலைப்பயணத்தில், இளையராஜா 1,500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் 7,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கிய அவரது இசைச் சாதனையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கவிஞர் ஜாவேத் அக்தர், மூத்த இயக்குநர் சாய் பரஞ்ச்பை மற்றும் மறைந்த நடிகர் ஓம் பூரி போன்ற ஜாம்பவான்கள் இந்த விருதினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 28, மாலை 5:30 மணிக்கு சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ருக்மிணி அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 28 முதல் பிப்ரவரி 1 வரை புரோசோன் மாலில் உள்ள PVR INOX திரையரங்குகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.