கோலிவுட் வட்டாரத்தில் தற்போது தீயாய் பரவி வரும் செய்தி இதுதான். தனுஷின் நடிப்பில் உருவாகவிருந்த D55 படத்தின் தயாரிப்புப் பணிகளில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பட்ஜெட் மற்றும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, மதுரை அன்புவின் கோபுரம் பிலிம்ஸ் (Gopuram Films) இப்படத்திலிருந்து விலகிக்கொண்டதாகவும், தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் (Wunderbar Films) மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் தனுஷ் இணையும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்திற்கு, ‘அமரன்’ வெற்றியைக் கருத்தில் கொண்டு இயக்குனர் பட்ஜெட்டை உயர்த்தியதாகக் கூறப்படுகிறது.
படத்தின் பிரம்மாண்டத்திற்காகவும், முக்கிய நடிகர்களின் சம்பளத்திற்காகவும் கேட்கப்பட்ட பட்ஜெட், வியாபார ரீதியாகக் கட்டுப்படியாகாது என தயாரிப்பாளர் அன்புச்செழியன் கருதியுள்ளார். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சுமூகமான முடிவு எட்டப்படாததால், கோபுரம் பிலிம்ஸ் இத்திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது.
கதையின் மீதும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் விஷன் (Vision) மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள தனுஷ், பட்ஜெட்டிற்காகத் தரத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. எனவே, தானே களத்தில் இறங்கி இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘இட்லி கடை’ என வரிசையாகப் படங்களைத் தயாரித்து வரும் வுண்டர்பார் ஸ்டுடியோஸ், இப்போது D55 படத்தையும் கையில் எடுத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் ஒரு தரமான சம்பவம் லோடிங் என்பது உறுதியாகியுள்ளது!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.