திரைப்பட செய்திகள்

கிரைம் திரில்லரில் பட்டையை கிளப்பும் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்”

இந்திய அளவில் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக “ஆஹா” விளங்குகிறது. சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மட்டுமின்றி ஏராளமான இணைய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆஹா புகழ் பெற்று விளங்குகிறது. அந்த வகையில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய இணைய தொடர் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை இரவு ஒரு எபிசோடு வீதம் வெளியாகும் இந்த இணைய தொடரின். மூன்று எபிசோடுகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ஜெஸ்வினி எழுதி, இயக்கி இருக்கும் இந்த இணைய தொடரை பேரபிள் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தேவன் சார்லஸ், பிரவீன் குமார் மற்றும் சரண்யா வீரமணி ஆகியோர் தயாரித்துள்ளனர். அஷ்வின் குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த தொடர் கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பை ஏற்படுத்தும் கதை கொண்டிருக்கும் “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” தொடர் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த தொடரின் ஒளிப்பதிவு பணிகளை என்.எஸ். சதீஷ் குமார் மேற்கொள்ள, சாம் ஆர்டிஎக்ஸ் படத்தொகுப்பு பணிகளையும், அஷ்வத் இசையமைத்துள்ளார். கதையின் படி தூள் பேட்டை பகுதியில் துணை ஆணையராக பொறுப்பேற்கும் அஷ்வின் குமார் அங்கு நடக்கும் மூன்று கொலைகள் பற்றிய விசாரணையை தொடங்குகிறார். முதல் இரு எபிசோடுகளில் கிரைம் திரில்லர் அம்சங்களுக்கு துளியும் குறைவின்றி ஏராளமான கேள்விகளை எழுப்பும் திரைக்கதை ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

“தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” தொடரில் அஷ்வின் குமாருடன் குரு லட்சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா, சௌந்தர்யா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வா மித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா, சுலமைான் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொடக்கத்திலேயே எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கும் இந்த தொடரின் அடுத்தடுத்த எபிசோடுகள் சீக்கிரம் வெளியாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்

Natarajan Karuppiah

Share
Published by
Natarajan Karuppiah

Recent Posts

தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் இந்தி சர்ச்சை! தமிழ் வளர்ச்சிக்குத் திமுக அரசின் பங்களிப்பு என்ன?

தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…

2 மணத்தியாலங்கள் ago

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க திமுக 8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு: கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்கு திட்டமா?

திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…

3 மணத்தியாலங்கள் ago

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXT-இல் பிரம்மாண்ட வெளியீடு!

சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…

4 நாட்கள் ago

தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது!

தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.

6 நாட்கள் ago

சாதி, மதமற்றவர் சான்றிதழ்: பார்த்திபனின் அதிரடி முயற்சி

சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…

1 வாரம் ago

மார்ச் 31-ல் எஸ்பிபி சிலை திறப்பு விழா: ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைத்த விஜய் யேசுதாஸ்!

மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…

1 வாரம் ago