இந்தியத் திரையுலகின் ‘இசைக்குயில்’ என்று அழைக்கப்படுபவர் மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, பல தலைமுறை ரசிகர்களைத் தனது குரலால் கட்டிப்போட்டவர்.
தற்போது திரையுலகை விட்டு ஓய்வெடுத்து வரும் எஸ்.ஜானகி அவர்களின் குடும்பத்தில் ஒரு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஒரே மகனான முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.
ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்த ஜானகி அவர்கள், சினிமாவில் பாடத் தொடங்கிய பிறகு சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் ராம் பிரசாத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினரின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா. இவர் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரளி கிருஷ்ணா, சென்னையைச் சேர்ந்த பிரபல நடனக் கலைஞர் உமாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எனினும், கருத்து வேறுபாடுகள் காரணமாக முரளி மற்றும் உமா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள்கள் இருவருக்கும் உமா திருமணம் செய்து வைத்துவிட்டார்.
விவாகரத்திற்குப் பிறகு முரளி கிருஷ்ணா ஐதராபாத்தில் தனது தாய் எஸ்.ஜானகியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது முதுமை காலத்தில் ஒரே மகனின் அரவணைப்பில் இருந்து வந்த எஸ்.ஜானகிக்கு, இந்த இழப்பு ஈடு செய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. முரளி கிருஷ்ணாவின் மறைவுச் செய்தியைக் கேட்டு திரையுலகைச் சேர்ந்த பலரும், ரசிகர்களும் எஸ்.ஜானகி அவர்களுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…