சென்னையில் தெருநாய்களின் நலன் மற்றும் அவற்றை கொல்லாமல் கருத்தடை செய்து பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டு பேசினார்.
நாய் கடித்தால் அதை பெரிய விஷயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது; கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை நாய் கடித்து ரேபிஸ் பரவுவது மிகவும் மோசமானது; அதை வைத்து பயத்தை உருவாக்குவதற்கு பதிலாக அதற்கான தீர்வு என்ன என்பதை கற்பிக்க வேண்டும்.தெருநாய்களை கொல்வது தீர்வு அல்ல; அவற்றுக்கு தடுப்பூசி போடுவதும், கருத்தடை செய்வதும் தான் நிரந்தர தீர்வு” என்று தெரிவித்தார்.
தெருநாய்கள் மீதான வன்முறையை கண்டித்த அவர், அன்பு மற்றும் அறிவியல் ரீதியிலான அணுகுமுறையே இப்பிரச்சினைக்கு தேவை என்று வலியுறுத்தினார். இந்தப் பேரணியில் விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிவேதாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.