கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரும் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ல் திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்ற 10.35 கோடி ரூபாய் கடன், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாததால், சொத்து ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் & சி. குமரப்பன் அமர்வு, பின்வருமாறு உத்தரவிட்டுள்ளது:
இதனால் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ‘வா வாத்தியார்’ படத்தின் திரைக்கு வெளியீடு தற்போது முழுமையாக ரத்தாகியுள்ளது. படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இந்த உத்தரவு தமண்ணில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி ரசிகர்களும் திரைத்துறையும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், கடன் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகுமா என காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…