கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று பெரும் அதிர்ச்சி அளிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கடந்த 2014-ல் திவாலானவர் என அறிவிக்கப்பட்ட தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பெற்ற 10.35 கோடி ரூபாய் கடன், வட்டியுடன் சேர்த்து தற்போது 21 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தத் தொகையை திருப்பிச் செலுத்தாததால், சொத்து ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் & சி. குமரப்பன் அமர்வு, பின்வருமாறு உத்தரவிட்டுள்ளது:
இதனால் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த ‘வா வாத்தியார்’ படத்தின் திரைக்கு வெளியீடு தற்போது முழுமையாக ரத்தாகியுள்ளது. படக்குழு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்றாலும், இந்த உத்தரவு தமண்ணில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்தி ரசிகர்களும் திரைத்துறையும் இப்போது அதிர்ச்சியில் மூழ்கியுள்ள நிலையில், கடன் பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட்டு படம் வெளியாகுமா என காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.