இசைஞானி இளையராஜா அவர்களின் 50 ஆண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் “Music for Meals” என்ற தலைப்பில் நேற்று பெங்களூரில் மகத்தான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் “Music for Meals” முயற்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த அறக்கட்டளை இந்தியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தினசரி ஊட்டமிக்க உணவு வழங்கி வருகிறது (தற்போது சுமார் 23.3 லட்சம் குழந்தைகளுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது).
இளையராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூருக்கு திரும்பிய இந்த நிகழ்ச்சி, அக்ஷய பாத்ராவின் வெள்ளி விழா (25 ஆண்டுகள்) கொண்டாட்டத்துடன் இணைந்திருந்தது. ரசிகர்கள் இதை “மறக்க முடியாத மாலை” எனப் புகழ்ந்தனர் – இசையும் சேவையும் இணைந்த அருமையான நிகழ்வு!
இசை மூலம் சமூகத்துக்கு திருப்பித் தரும் இளையராஜாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…