இசைஞானி இளையராஜா அவர்களின் 50 ஆண்டு இசைப் பயணத்தை சிறப்பிக்கும் வகையில், சமூக சேவைக்காக நிதி திரட்டும் நோக்கத்துடன் “Music for Meals” என்ற தலைப்பில் நேற்று பெங்களூரில் மகத்தான இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி அக்ஷய பாத்ரா அறக்கட்டளையின் “Music for Meals” முயற்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த அறக்கட்டளை இந்தியா முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு தினசரி ஊட்டமிக்க உணவு வழங்கி வருகிறது (தற்போது சுமார் 23.3 லட்சம் குழந்தைகளுக்கு தினமும் உணவு வழங்கப்படுகிறது).
இளையராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூருக்கு திரும்பிய இந்த நிகழ்ச்சி, அக்ஷய பாத்ராவின் வெள்ளி விழா (25 ஆண்டுகள்) கொண்டாட்டத்துடன் இணைந்திருந்தது. ரசிகர்கள் இதை “மறக்க முடியாத மாலை” எனப் புகழ்ந்தனர் – இசையும் சேவையும் இணைந்த அருமையான நிகழ்வு!
இசை மூலம் சமூகத்துக்கு திருப்பித் தரும் இளையராஜாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புரோமோவில் அரோரா பேசுகையில் "18 லட்சத்தை விட இந்த தருணத்துக்காகத்தான் காத்திட்டு இருந்தேன். அரோராவை அழுக வைக்கணும்னா எல்லாரும் ஈசியா துஷார்…
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்…
நடிகர் கார்த்தி நடிப்பில், 'சூது கவ்வும்' புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் பல…
2020-ம் ஆண்டு வெளியான 'திரௌபதி' திரைப்படம் பெரும் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கியுள்ளார்.
கே.ஜி.எஃப் வெற்றிக்குப் பிறகு கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்…
சென்னை, ஜனவரி 9, 2026: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில்,…