பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், உலக நாயகன் கமல்ஹாசனுக்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து பல திரை உலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அந்த வகையில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பத்மபூஷன் திரு. கமல்ஹாசன் அவர்கள், மதிப்புமிக்க தி அகாடமி விருதுகள் 2025 குழுமத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்திய திரையுலகிற்கு பெரும் பெருமைக்குரிய தருணம்.
60 ஆண்டுகளாக அற்புதமான நடிப்பு பயணத்தை கொண்ட கமல்ஹாசன், ஒரு நடிகரை தாண்டியவர். ஒரு நடிகர், கதை சொல்பவர் மற்றும் இயக்குனராக அவரது கலைத் திறமை, பல்துறைத் திறமை மற்றும் பல ஆண்டு கால அனுபவம் ஆகியவை இந்திய மற்றும் உலகத் திரைப்படத் துறையில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு எழுத்தாளர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என திரைப்பட தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது அசாதாரண ஆதிக்கம் உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அவர் ஒரு உண்மையான கலைஞர்.
அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலக திரைப்பட துறைக்கு மேலும் பல ஆண்டுகள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்.
சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் 'கருப்பு'.
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி…
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அன்னா பென் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள ‘கான் சிட்டி’…
தமிழ் சினிமாவின் 'மேன்மகன்' சிலம்பரசன் TR (STR) நடிப்பில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் திரைப்படம் 'அரசன்'.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷ்ணு விஷால்…
தமிழ், இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பிஸியாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடிப் படங்களை ஒப்புக்கொண்டு நீண்ட காலமாகிவிட்டது.