விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் ‘பணப்பெட்டி 2.0’ டாஸ்க் தொடங்கியுள்ளது. இந்த டாஸ்க்கின் ஒரு பகுதியாக, பழைய சீசன்களில் இருந்து போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளனர். இவர்களின் வருகை வீட்டிற்குள் புதிய உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோ வீடியோவில் ரம்யா மற்றும் சாண்ட்ரா இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புரொமோவில், ரம்யா சாண்ட்ராவிடம் கோபமாக கேள்வி எழுப்புகிறார்: “என்ன பத்தி பின்னாடி பேசுனாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? இல்ல நான் போகும்போது என்னைக் கட்டி புடிச்சு அழுதாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா?”
இதற்கு சாண்ட்ரா பதிலளிக்கிறார்: “நான் நடிக்கிறேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்படியே வச்சுக்கோ.”
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தொடர்ந்து கூறுகிறார்: “என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்? வெறும் நடிப்புதான். நடிச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்?”
இந்த வாக்குவாதம் வீட்டிற்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பணப்பெட்டி 2.0 டாஸ்க் மூலம் பழைய போட்டியாளர்களின் என்ட்ரி வீட்டிற்குள் புதிய மோதல்களையும், உத்திகளையும் கொண்டு வந்துள்ளது. ரம்யா – சாண்ட்ரா மோதல் அடுத்த எபிசோடுகளில் எப்படி வெடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தினசரி இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.