விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் ‘பணப்பெட்டி 2.0’ டாஸ்க் தொடங்கியுள்ளது. இந்த டாஸ்க்கின் ஒரு பகுதியாக, பழைய சீசன்களில் இருந்து போட்டியாளர்களான வியானா, திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ், ரம்யா, அப்ஷரா ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் என்ட்ரி ஆகியுள்ளனர். இவர்களின் வருகை வீட்டிற்குள் புதிய உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், வெளியாகியுள்ள இரண்டாவது புரொமோ வீடியோவில் ரம்யா மற்றும் சாண்ட்ரா இடையே கடும் வாக்குவாதம் நடைபெறுவது இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
புரொமோவில், ரம்யா சாண்ட்ராவிடம் கோபமாக கேள்வி எழுப்புகிறார்: “என்ன பத்தி பின்னாடி பேசுனாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா? இல்ல நான் போகும்போது என்னைக் கட்டி புடிச்சு அழுதாங்கள்ள அதுதான் உண்மையான சாண்ட்ராவா?”
இதற்கு சாண்ட்ரா பதிலளிக்கிறார்: “நான் நடிக்கிறேன்னு தான் எல்லாரும் சொல்றாங்க. அப்படியே வச்சுக்கோ.”
இதனால் ஆத்திரமடைந்த ரம்யா தொடர்ந்து கூறுகிறார்: “என்னை பாம்புன்னு சொல்ற அளவுக்கு நான் என்ன பண்ணிட்டேன்? வெறும் நடிப்புதான். நடிச்சிட்டு தான் இருக்காங்க. அந்த வீடியோவை பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்?”
இந்த வாக்குவாதம் வீட்டிற்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பணப்பெட்டி 2.0 டாஸ்க் மூலம் பழைய போட்டியாளர்களின் என்ட்ரி வீட்டிற்குள் புதிய மோதல்களையும், உத்திகளையும் கொண்டு வந்துள்ளது. ரம்யா – சாண்ட்ரா மோதல் அடுத்த எபிசோடுகளில் எப்படி வெடிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தினசரி இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது.
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்…
Actor Vijay Antony is well-known in Tamil cinema for choosing unique storylines and intense characters.…