இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம் மீது வழக்குப்பதிவு!
பங்குனி 2, 2026 Published by Natarajan Karuppiah

கடந்த ஆண்டு இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த மலையாளத் திரைப்படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் சிதம்பரம் எஸ். பொடுவால், தற்போது பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இயக்குநர் சிதம்பரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில்:தன்னைச் சந்திக்க வந்தபோது சிதம்பரம் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், தவறாக நடக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாகத் திரையுலகைச் சேர்ந்த சிலரிடம் முறையிட்டும் பலன் கிடைக்காததால், தற்போது காவல்துறையை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, எர்ணாகுளம் டவுன் சவுத் (Ernakulam Town South) காவல்துறையினர் சிதம்பரம் மீது பாலியல் சீண்டல் (Sexual Harassment) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

போலீசார் இது குறித்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விரைவில் இயக்குநர் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து, மலையாளத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. அந்த வரிசையில், தற்போது தேசிய அளவில் கவனிக்கப்பட்ட ஒரு இளம் இயக்குநர் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
















