சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 173’ திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியங்கா மோகன் இப்படம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிபியின் அடுத்த படம் யாருடன் இருக்கும் என்று ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்திருந்தது. இப்போது அவர் நேரடியாக சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ளது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
பேட்டியில் ‘தலைவர் 173’ படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பிரியங்கா மோகன் மிகவும் வெளிப்படையாகப் பதிலளித்தார்:
“ரஜினி சார் படத்தோட கதை என்னன்னு கூட எனக்கு இன்னும் தெரியாது. அதுல நான் ஒரு பகுதியா இருப்பேனான்னு இப்ப வரைக்கும் எனக்கு நிச்சயமாத் தெரியல. ‘டான்’ படக்குழுவே சிபி சார் அடுத்து என்ன பண்ணப்போறாருன்னு ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருந்தோம். இப்போ அவர் ரஜினி சாரை வச்சு படம் பண்றதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அவரும் ரஜினி சாரோட மிகப்பெரிய ரசிகர்.”
பிரியங்கா மோகன் இப்படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கோலிவுட் வட்டாரங்களில் அவர் ரஜினிக்கு மகளாக அல்லது ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஏற்கனவே அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கமல் ஹாசனின் RKFI நிறுவனம் தயாரிக்கும் இப்படம், ஒரு குடும்பப் பின்னணியைக் கொண்ட கமர்ஷியல் எண்டர்டெய்னராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
கடந்த சில காலங்களாகவே நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா…
ஒரு திரைபடம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் பிரம்மாண்ட பயணம், மற்றொன்று ஒரு ஐயப்ப பக்தரின் வாழ்க்கைப் பயணம் – தந்த்ரா…
சினிமா வரலாற்றில் கணவன், மனைவி இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாவது மிகவும் அபூர்வமான ஒன்று.
செல்வராகவன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இருவரும் ஏற்கனவே 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' போன்ற கிளாசிக் ஹிட்களைக் கொடுத்தவர்கள்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations ) இணைந்து…
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு உலகப் புகழ்பெற்ற…