நடிகர் சிம்புவும், இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் புதிய படம் பற்றிய செய்திகள் ஏற்கனவே வந்த நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
சிம்புவின் 49-வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படம், ‘வடசென்னை’ கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்டது என தெரிகிறது. சிம்பு ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஆச்சரியப்படும் விதமாக, பிரபல இயக்குனர் நெல்சனும் இதில் ஒரு சிறப்பு வேடத்தில் தோன்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இந்தப் படத்தின் கதை ‘ராஜன் வகையறா’ என்ற பெயரில் உருவாகி வருவதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…