பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். இச்சம்பவம் அஜித் ரசிகர்களிடையேயும், திரைத்துறையினரிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித்குமாரின் தாயார் மோகினி மணி, கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். மறைந்த மோகினி மணி அவர்களுக்கு அஜித்குமார் தவிர அனில்குமார், அனூப்குமார் ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.
மோகினி மணியின் மறைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அஜித்தின் ரசிகர்களும், பொதுமக்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதல்களையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த துயரமான தருணத்தில், குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இறுதிச்சடங்குகளை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அஜித் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மறைந்த மோகினி மணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் வாடும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.