தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அருண் விஜய், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
தனது அடுத்த படத்தை ‘கொம்பன்’, ‘விருமன்’ படங்களின் புகழ் பெற்ற இயக்குநர் முத்தையா இயக்க உள்ளதாக அருண் விஜய் உறுதிப்படுத்தினார். கிராமிய பின்னணியில் எதார்த்தமான ஆக்சன் படங்களை இயக்குவதில் வல்லவரான முத்தையாவுடன் அருண் விஜய் முதன்முறையாக இணைவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த புதிய படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு (Shooting) தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முத்தையா அவர்களின் பாணியில் ஒரு அழுத்தமான கிராமத்துக் கதையாக இந்தப் படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்டத் தல’ போன்ற படங்களின் வெளியீட்டிற்குப் பிறகு இப்பணி முழுவீச்சில் தொடங்கும்.
இயக்குநர் முத்தையாவுடன் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் செல்ல ஆர்வமாக உள்ளேன்,” என அருண் விஜய் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.