திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், தனது தந்தை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திடம் இருந்து கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தனது படத்தின் பத்திரிகையாளர் காட்சி மற்றும் ப்ரிமீயர் ஷோ முடிந்த பிறகு நடந்த அந்த நெகிழ்வான தருணத்தை அவர் இவ்வாறு விவரித்தார்:
ப்ரிமீயர் ஷோவில் அப்பா என் படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனார். அந்தப் படத்தை அவர்தான் தனது பாராட்டுகளால் தூக்கி நிறுத்தினார்.ஷோ முடிந்து நாங்கள் ஒன்றாக போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்றோம். வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாவும், அம்மாவும் என்னை ஓடி வந்து மிகவும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள்.அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் நான் அப்பாவிடம், ‘இதுதான் சக்சஸா அப்பா?’ என்று கேட்டேன். அவர் அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் மென்மையாகச் சிரித்தார். அந்தத் தந்தையின் சிரிப்பை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது.”
திரையுலகில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் சௌந்தர்யா, இந்த வெற்றியைத் தனது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறார்.
“நான் 17, 18 வருடங்களாகச் சினிமாவில் இருக்கிறேன். ஆனால், இதுதான் எனது முதல் சக்சஸ் மீட்” என அவர் கூறியது, ஒரு மகளாகவும் கலைஞராகவும் அவர் அடைந்த திருப்தியை வெளிப்படுத்தியது.
“ஒரு மகளுக்குத் தந்தையின் பாராட்டை விடப் பெரிய விருது எதுவுமில்லை என்பதை சௌந்தர்யாவின் இந்தப் பேச்சு மீண்டும் நிரூபித்துள்ளது.”
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge)…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், தனது தனித்துவமான கதைக்களத்தால் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.