திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அவர், தனது தந்தை ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்திடம் இருந்து கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
தனது படத்தின் பத்திரிகையாளர் காட்சி மற்றும் ப்ரிமீயர் ஷோ முடிந்த பிறகு நடந்த அந்த நெகிழ்வான தருணத்தை அவர் இவ்வாறு விவரித்தார்:
ப்ரிமீயர் ஷோவில் அப்பா என் படத்தைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்து போனார். அந்தப் படத்தை அவர்தான் தனது பாராட்டுகளால் தூக்கி நிறுத்தினார்.ஷோ முடிந்து நாங்கள் ஒன்றாக போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்றோம். வீட்டிற்குள் நுழைந்ததும் அப்பாவும், அம்மாவும் என்னை ஓடி வந்து மிகவும் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள்.அந்த நெகிழ்ச்சியான தருணத்தில் நான் அப்பாவிடம், ‘இதுதான் சக்சஸா அப்பா?’ என்று கேட்டேன். அவர் அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் மென்மையாகச் சிரித்தார். அந்தத் தந்தையின் சிரிப்பை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது.”
திரையுலகில் பல ஆண்டுகளாகப் பயணித்து வரும் சௌந்தர்யா, இந்த வெற்றியைத் தனது வாழ்வின் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறார்.
“நான் 17, 18 வருடங்களாகச் சினிமாவில் இருக்கிறேன். ஆனால், இதுதான் எனது முதல் சக்சஸ் மீட்” என அவர் கூறியது, ஒரு மகளாகவும் கலைஞராகவும் அவர் அடைந்த திருப்தியை வெளிப்படுத்தியது.
“ஒரு மகளுக்குத் தந்தையின் பாராட்டை விடப் பெரிய விருது எதுவுமில்லை என்பதை சௌந்தர்யாவின் இந்தப் பேச்சு மீண்டும் நிரூபித்துள்ளது.”
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…