கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய் பரவியது. இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, மிகவும் வெளிப்படையாகப் பேசினார்:
“யார் எனக்கு திருமணம் என்ற வதந்தியைக் கிளப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பிப்ரவரி 14-ஆம் தேதி (காதலர் தினம்) அவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி (முட்டாள்கள் தினம்) போல மாறப்போகிறது,” என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.
“சிலர் அவர்களாகவே எதையாவது பதிவிட்டு, அதை நான் சொன்னதாகச் சொல்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகின்றன,” என தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ரசிகர்களிடம் மறைக்க எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்:
“எனக்குத் திருமணம் என்றால் அதனை நானே கண்டிப்பாக முறைப்படி அறிவிப்பேன். நான் எதையும் மறைத்து வைக்கக் கூடிய ஆள் கிடையாது.”
தற்போது தென்னிந்திய மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் மிருணாள், தனது முழுக் கவனத்தையும் சினிமாவிலேயே செலுத்தி வருகிறார். ‘சீதா ராமம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இவருக்கான ரசிகர் பட்டாளம் பலமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 20 அன்று வெளியாகவுள்ள இவரது புதிய படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம், தற்போது மீடியாக்களின் கவனம் மீண்டும் அவரது படத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…