Download App

குரு தோஷத்தால் அவதியா? ஏழு ஜென்ம கர்ம வினை தீர அகத்தியர் அருளிய போகரின் அற்புத வரலாறு!

July 11, 2025 Published by anbuselvid8bbe9c60f

சென்னை: குருவின் மகத்துவம் எவரும் அறிந்தது. “சனியைப் போல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை” என்பது போல், குருவைப் போல் ஞானம் அளிப்பவரும் இல்லை, தோஷங்களை நீக்குபவரும் இல்லை. உங்கள் ஜாதகத்தில் குரு சம்பந்தப்பட்ட தோஷங்கள் உள்ளதா? அதாவது, குரு 6, 8, 12ஆம் இடங்களில் மறைந்திருத்தல், மகரத்தில் நீசமாய் இருத்தல், ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருத்தல், அல்லது சந்திரன் மற்றும் குரு பரஸ்பரம் 6, 8, 12 ஆம் இடங்களில் அமைந்து சகட தோஷத்தை உருவாக்குதல் போன்ற அமைப்புகள் உங்கள் வாழ்வில் தொடர் தோல்விகளையும், எடுத்த காரியம் மீண்டும் முதலில் இருந்து தொடங்கும் சூழலையும் உருவாக்குகிறதா? கவலை வேண்டாம்! இந்த அனைத்து தோஷங்களையும் நீக்கி, அன்னை ஆதிபராசக்தியின் அருளால் சந்தோஷத்தை அருளும் அரிய குருவின் மகிமையை, ஆன்மீகக்ளிட்ஸ் வெளிப்படுத்தியுள்ளது.

அகத்தியரின் உபதேசம் – குருவின் திருப்பாதமே சகல தீர்த்தங்களுக்கும் சமானம்: ஒரு காலகட்டத்தில், குற்றாலத்தில் தனது ஆசிரமத்தில் அன்னை ஆதிபராசக்தியை வழிபட்டுக்கொண்டிருந்த அகத்தியப் பெருமான், தனது சீடர்களிடம் குருவின் சிறப்பைப் பற்றி எடுத்துரைத்தார். “உலகில் எந்தத் தோஷங்கள் இருப்பினும், அவை நீங்க முதலில் குருவின் திருப்பாதத்தை மனதிலே நினைக்க வேண்டும். குருவின் திருமுகத்தை நினைத்த மாத்திரத்திலேயே, நீங்கள் செய்த ஏழு ஜென்ம கர்ம வினைகளும் நீங்கிவிடும். முக்தி மோட்சம் என்ற நிலைகள் சித்திக்கும்.” என்றார்.

மேலும், குருவின் வார்த்தைகளை எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் கேட்க வேண்டும்; குரு ஒரு மந்திரத்தைத் தவறாகச் சொன்னாலும், அதை குரு சொன்ன வார்த்தை என்று நம்பி, மனதிலே உள்வாங்கி வணங்க வேண்டும். இத்தகைய நற்பண்புகள் இருந்தால், கலியுகத்தில் கஷ்டங்களே இருக்காது என்று அன்னை லோபாமுத்திரையிடம் அகத்தியர் கூறினார்.

கலியுகத்தில் குரு நிந்தனை – பெரும் பாப தோஷம்: ஆனால் கலியுகத்தில் மக்கள் மாயையில் மயங்கி, குருவின் மகிமையை உணராமல், குருவை புறம்பேசுவது, கேலி செய்வது, சந்தேகப்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். “குரு என்னப்பா இப்படிப் புதுசா உடையை உடுத்தி இருக்கிறாரே, இவரெல்லாம் ஒரு குருவா?” என ஏளனம் செய்வது அநேக ஆயிரம் பாப தோஷங்களைத் தரும். குருவின் மகிமையை உணர்ந்து அவரைப் போற்றுபவர்களுக்கு ஏற்படும் சிறப்புகளை உலகம் போற்றும்.

போகரின் வரலாறு – குரு பக்தியின் உச்சம்: அகத்தியப் பெருமான், ஞானத்தின் உயர்நிலையை உணர்த்த ஒரு திருவிளையாடலை நடத்தினார். 99 மாணவர்களில், ஒரு மாணவன் மட்டும் படிக்கும் திறனில் சற்று குறைவாகக் கருதப்பட்டான். மற்ற 98 மாணவர்களும் தங்கள் சித்துக்களால் வெவ்வேறு திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட விருப்பம் தெரிவித்தனர். ஆனால், 99வது மாணவன், “ஐயனே அகத்தியரே, எனக்கு வேறு எதுவுமே வேண்டாம்! எனக்கு உமது திருப்பாதத்தைத் தரிசித்துவிட்டு, என் குருவுக்கு சேவை செய்ய வேண்டும். நீரே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றும் சேர்ந்த நிலை. எனக்கு உனக்கு சேவை செய்வதை விட வேறு பெரும் பாக்கியம் இல்லை!” என்று வேண்டினான்.

குரு தரிசனம், ஸ்பர்சனம் (தொடுதல்), சம்பாஷணம் (பேசுதல்) இந்த மூன்றும் கிடைத்துவிட்டால், சகல கோயில்களுக்கும் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும்; நவ கிரகங்களும் அருளத் துவங்கும்; எப்பேர்ப்பட்ட வறுமையாயினும் நீங்கத் துவங்கும். குருவின் ஒவ்வொரு செயலையும் உங்கள் வினைகளைத் தீர்க்கவும், வாழ்க்கையில் ஏற்றம் தரவும் அன்னை ஆதிபராசக்தி நடத்தும் திருவிளையாடலாக உணரத் துவங்கினால், நீங்கள் அடையப்போகும் வெற்றி வரலாறு பேசும்.

குரு சேவையைப் பெரிதென மதித்த அந்த மாணவனின் மனமுதிர்ச்சியைக் கண்ட அன்னை ஆதிபராசக்தி அக்கணமே தோன்றி, “அப்பா, உலகிலேயே மிகப்பெரிய ஞானத்தை நீ அடைந்துவிட்டாய்! குரு என்பவர் இருளை நீக்குபவர். குருவை யார் போற்றுகிறானோ, அவனை உலகம் போற்றத் துவங்கும். நீ இனி போகநாதன் என்று அழைக்கப்படுவாய். சித்தர்களுக்கு சித்தனாக விளங்குவாய். தண்டாயுதபாணியின் அருள்நிலைகளை நீயே ஸ்தாபிதம் செய்வாய். உன் பெயரைச் சொன்னாலும் வினை நீங்கும், சுணக்கம் நீங்கும், பிணக்கம் நீங்கும். எப்பேர்பட்ட நோயாயினும் நீக்கக்கூடிய வல்லமையைப் பெறுவாய். உன்னிடம் காலத்தின் ஞானமும், மூலிகைகளின் ஞானமும் சேர்ந்துவிடும்” என்று அருள்புரிந்தாள். இவ்வாறு கல்வியில் பின்தங்கிய ஒரு சாதாரண மாணவன், குரு பக்தியால் சித்தர்களில் ஒருவனான போகநாதனாக உயர்ந்தான்.

குருவை போற்றுவதன் பலன்கள்: இந்த அகத்தியருக்கும் போகருக்கும் நடந்த சம்பாஷணைக் கதையை கேட்டாலே, அவர்களுக்கு குருவின் அனுக்கிரகம் ஏற்பட்டுவிடும். வாழ்க்கையில் எப்பேர்பட்ட நோயாயினும், வினையாயினும், வறுமையாயினும், அன்னை ஆதிபராசக்தி, அகத்தியர், மற்றும் போகப் பெருமானின் பேரருளால் சகல நலன்களும் பெருகும். தண்டாயுதபாணியே உங்கள் வீட்டில் வந்து நலம் தரத் துவங்குவார்.

குருவை வழிபடும் வழிமுறை: நாம் எத்தனையோ பரிகாரங்கள் செய்கிறோம், ஆயிரக்கணக்கான ஆலயங்களுக்குச் செல்கிறோம். ஆயினும் ஏன் நமக்கு மந்திர சித்தி ஏற்படுவதில்லை, ஞானம் சித்திப்பதில்லை என்பதை உணரும்போது, குருவை போற்ற வேண்டும். “உங்கள் குருவை எப்படி கண்டுபிடிப்பது?” என்று சிலர் கேட்பதுண்டு. நீங்கள் குருவைக் கண்டுபிடிக்க முடியாது; குருவே உங்களை உங்கள் கர்ம வினைக்கேற்பத் தேர்ந்தெடுத்து, நல்வினைகள் செய்யச் செயல்படுத்துவார். குரு ஒருவருக்கே இறைவனைக் காட்டும் அற்புத பேராற்றல் உண்டு. வேறு எந்த தேவதை வழிபாட்டாலும் இறை நிலையை உணர்வது சிரமம். எனவே, அனுதினமும் “ஓம் குரவே நமஹ” என்று சொல்லி, குருவைப் போற்றி, அவரது அருளைப் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.