55-வது சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) மேடையில் உலகநாயகன் கமல் ஹாசன் பேசியது ரசிகர்களை மட்டுமல்ல, முழு திரையுலகையும் நெகிழ வைத்தது.
“இன்னும் மூணு பெரிய படங்கள் இருக்கு… ‘தக்லைஃப்’, ‘இந்தியன் 3’, ‘கல்கி 2898 AD’ பாகம் 2. இதெல்லாம் முடிச்சிட்டு… எனக்கு ஒரு ஆசை இருக்கு. இந்திய முப்படைகள் பற்றி ஒரு பெரிய படம் எடுக்கணும். ராணுவம், விமானப்படை, கடற்படை… அவங்களோட வாழ்க்கை, தியாகம், காதல், குடும்பம்… இதை உலகம் முழுக்க பார்க்கணும். அதுதான் என் கனவு,” என்று கமல் குரல் தழுதழுக்க பேசினார்.
கூடவே அவர் சொன்ன வார்த்தைகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன:
“நான் 66 வயசுல ‘விக்ரம்’ பண்ணினேன்… 70 வயசுல ‘கல்கி’ பண்ணிட்டு இருக்கேன். வயசு ஒரு தடையே இல்லை. ஆசை இருக்கிறவரைக்கும் சினிமா இருக்கும். ரசிகர்கள் இருக்கிறவரைக்கும் நான் இருப்பேன்.”
இந்திய ராணுவத்தின் மீதான கமலின் பற்று புதிதல்ல. ‘ஹே ராம்’, ‘விஸ்வரூபம்’, ‘இந்தியன்’ என அவரது படங்களிலேயே தேசபக்தியும் வீரமும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இப்போது முப்படைகளை மையப்படுத்திய ஒரு பான்-இந்திய பிரம்மாண்ட படம் என்கிற கனவை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
ரசிகர்கள் ஏற்கெனவே கற்பனை செய்து கொண்டாடத் தொடங்கிவிட்டனர்:
கமல் சாரு முப்படை அதிகாரியா வந்தா… தியேட்டர் தாங்காது!
இந்தியன் 3 முடிச்சிட்டு இதை அறிவிச்சா போதும்… நாடே கொண்டாடும்!
மணிரத்னம், ஷங்கர், நாக் அஸ்வின் என மூன்று மாபெரும் இயக்குநர்களுடன் தொடர்ந்து பயணிக்கும் கமல், அதன் பிறகு முப்படைகள் படம் என்றால்… அது உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.