பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 81 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த வார வீட்டுத் தலைவராக கம்ருதீன் செயல்பட்டு வரும் நிலையில், வீட்டில் ‘ஃப்ரீஸ்’ (ஃபேமிலி ரவுண்ட்) டாஸ்க் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை வினோத், சபரி, கனி, அமித், திவ்யா, பார்வதி, கம்ருதீன், அரோரா உள்ளிட்டோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்த நிலையில், சமீபத்திய புரொமோக்களில் விக்ரம் மற்றும் சுபிக்ஷாவின் குடும்பத்தினரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய புரொமோவில் வி.ஜே. பார்வதி தனது அம்மாவுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பார்வதி, “நாங்க (கம்ருதீன் – பார்வதி) தனித்தனியா தான் விளையாடுறோம். ஆனா சேர்ந்து இருக்கனால தனித்தனியா விளையாடுற மாதிரி தெரியாம இருக்கலாம்” என்று கூறுகிறார்.
இதற்கு பதிலளித்த பார்வதியின் அம்மா, “ஒரு ஆணும், பொண்ணும் சேர்ந்து இருக்கிறது இயல்புதான். ஆனா அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். கேம்ல இருந்து நீ சில விஷயங்களைக் கத்துக்கணும்” என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
மேலும், பார்வதி தனது அம்மாவிடம், “அரோராவை என்னைக்குமே நான் நம்புனது இல்ல. அது ஒரு நல்ல பாம்பே கிடையாது. சரியான விஷப்பாம்பு” என்று கடுமையாக விமர்சித்துப் பேசுகிறார்.
இந்த உரையாடல் புரொமோ வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது. பார்வதி – கம்ருதீன் இடையேயான நெருக்கம் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து பேசப்படும் நிலையில், அம்மாவின் அட்வைஸும் அரோரா மீதான விமர்சனமும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் மூலம் உணர்ச்சிகரமான தருணங்கள் தொடர்கின்றன. அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.