மலையாளத் திரையுலகில் மட்டுமல்லாமல், தென்னிந்தியா முழுவதும் கடந்த 2024-ம் ஆண்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் ‘ஆவேஷம்’. ஜித்து மாதவன் இயக்கத்தில், பகத் பாசில் ‘ரங்கண்ணன்’ என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்த இந்தப் படம், வசூலிலும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது.
இந்நிலையில், ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான ‘ஆவேஷம் 2’ குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் பகத் பாசில் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய பகத் பாசில், ‘ஆவேஷம்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என்று தெரிவித்துள்ளார். அவர் இது குறித்துக் கூறியது:
“நான் எங்கு சென்றாலும் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி ‘ஆவேஷம் 2’ எப்போது என்பதுதான். நிச்சயமாக ஆவேஷம் படத்தின் அடுத்த பாகம் உண்டு. 2027 அல்லது 2028-ம் ஆண்டில் இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.”
தற்போது ‘ஆவேஷம்’ படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தை (Suriya 47) இயக்கி வருகிறார். இந்தப் பெரிய பட்ஜெட் படத்தின் பணிகளை முடித்த பிறகே அவர் ‘ஆவேஷம் 2’ பணிகளைத் தொடங்குவார் என்று தெரிகிறது. அதேபோல் பகத் பாசிலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளதால், ரங்கண்ணனின் வருகைக்கு இன்னும் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆவேஷம் 2-க்கு முன்பாக, பகத் பாசில் மம்மூட்டி மற்றும் மோஹன்லால் உடன் இணைந்து நடித்துள்ள ‘பேட்ரியாட்’ (Patriot) திரைப்படம் வரும் ஏப்ரல் 23, 2026 அன்று வெளியாக உள்ளது. இதில் பகத் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…