நடிகர் சிம்பு (STR) அடுத்தடுத்து பல முக்கிய படங்களில் பிஸியாக உள்ள நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் ஒரு புதிய படத்தில் இணையும் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்த பிறகு, சிம்பு அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளதால், அந்தப் படமே முதலில் தொடங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
இந்த இரு படங்களையும் முடித்த பிறகு, சிம்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான முதற்கட்ட கதை விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கதை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை.
சிம்புவின் இந்த தொடர் பட அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன!
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்…
Actor Vijay Antony is well-known in Tamil cinema for choosing unique storylines and intense characters.…
முதல் பாகத்தில் மனைவியின் குஸ்தி (மல்யுத்தம்) திறமை தெரியாமல் கல்யாணம் செய்து முழிக்கும் விஷ்ணு விஷாலைப் பார்த்தோம்.
தமிழ் சினிமாவின் இசைப் பேரரசர், 'இசைஞானி' இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது சமூக வலைத்தளப்…
பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் 'சிக்மா' (Sigma).