நடிகர் சிம்பு (STR) அடுத்தடுத்து பல முக்கிய படங்களில் பிஸியாக உள்ள நிலையில், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் ஒரு புதிய படத்தில் இணையும் பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவில்பட்டியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகள் அமைத்து மீதமுள்ள காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்த பிறகு, சிம்பு அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகியோர் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். இதில் எந்தப் படம் முதலில் தொடங்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ளதால், அந்தப் படமே முதலில் தொடங்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
இந்த இரு படங்களையும் முடித்த பிறகு, சிம்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்கான முதற்கட்ட கதை விவாதங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கதை இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை.
சிம்புவின் இந்த தொடர் பட அறிவிப்புகள் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன!
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…