இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் இப்படத்தைப் பாராட்டியிருப்பது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வாரம் வெளியான ‘துரந்தர் – தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தனது எக்ஸ் (X) தளத்தில் படத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது:
“என்ன ஒரு படம்! பாக்ஸ் ஆபீஸ் கா பாப் (Box Office Ka Baap). ரன்வீர் சிங்கிற்கும், மொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய பாராட்டுகள். ஒவ்வொரு இந்தியனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். ஜெய் ஹிந்த்!”
ரஜினிகாந்தின் இந்த “மஸ்ட் வாட்ச்” (Must Watch) சான்றிதழ், படத்தின் வசூலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் பாராட்டுக்கு மிக உருக்கமான முறையில் பதிலளித்துள்ளார் இயக்குநர் ஆதித்யா தர். தனது பதிவில் அவர் ரஜினி மீதான தீராத அன்பை வெளிப்படுத்தியுள்ளார்:
நாங்கள் வளர்ந்த காலத்தில் பொழுதுபோக்கு (Entertainment) என்ற சொல்லுக்கு அடையாளமே நீங்கள் தான். பல தசாப்தங்களாக எங்களை விசில் அடிக்க வைத்து, சிரிக்க வைத்து, அழ வைத்த மாயாஜாலம் உங்களுடையது.நீங்கள் இந்தப் படத்தைப் பாராட்ட வேண்டும் என்று சொன்னது, என் வாழ்வின் மிகப் பெரிய ‘சூப்பர் ஸ்டார்’ தருணம். எங்களை எப்போதும் பெரிய கனவுகளைக் காணத் தூண்டிய ஒருவரிடமிருந்து கிடைத்த ஆசியாக இதைக் கருதுகிறேன். இன்றும் அதே கம்பீரத்துடனும் (Swag), வசீகரத்துடனும் நீங்கள் திரையில் தோன்றுவது ஒரு மேஜிக்” என ஆதித்யா தர் நெகிழ்ந்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வந்துள்ள இந்தப் படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், மாதவன், அர்ஜூன் ராம்பல் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தேசப்பற்று மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால்,
தன்னுடைய முதல் படமான 'தி லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு, லெஜெண்ட் சரவணன் மீண்டும் திரையுலகை அதிரவைக்கத் தயாராகிவிட்டார்.
மலையாளத் திரையுலகின் பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ்…
தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களான சூர்யா மற்றும் சிலம்பரசன் (STR) மீண்டும் ஒரு மெகா ஹிட் கூட்டணியில் இணைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் அறிமுகமாகி, இன்றுவரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாகவும், சிறந்த குணச்சித்திர…
தமிழ் சினிமாவில் 'சிவா மனசுல சக்தி' (SMS) என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜீவா…