சூர்யா ரசிகர்கள் தற்போது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது தற்போதைய படத்தை முடித்த பிறகு, சூர்யா அடுத்ததாக யாருடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் நிலவி வந்தது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, இயக்குநர் பாண்டிராஜ் உடன் சூர்யா மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கனவே சூர்யா – பாண்டிராஜ் கூட்டணியில் வெளியான ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கு முன்னதாக சூர்யாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற பிளாக்பஸ்டர் படங்களை பாண்டிராஜ் வழங்கியுள்ளார்.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சமூக கருத்துக்களுடன் கூடிய ஆக்ஷன் கலந்திருந்தது. ஆனால், இந்தப் புதிய படம் பாண்டிராஜின் டிரேட்மார்க் பாணியான கிராமத்து பின்னணியில் அமைந்த முழு நீள குடும்பத் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
குடும்ப உறவுகள், சென்டிமென்ட் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தத் திரைக்கதை அமையவுள்ளதாம்.சூர்யா தற்போது தனது 46 மற்றும் 47-வது படங்களில் பிஸியாக இருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு ‘கடைக்குட்டி சிங்கம்’ அல்லது ‘வம்சம்’ பாணியிலான மேஜிக்கை சூர்யாவிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் இன்று தனது 41-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge)…