“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.
ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’. இந்த படத்தை இயக்குநர் மாருதி, ஹாரர்–காமெடி வகையில் ஒரு எவர்கிரீன் படமாக உருவாக்கியுள்ளார். தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஷ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் மிகப் பெரிய அளவில் இந்த படத்தைத் தயாரித்துள்ளனர். மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சங்கராந்தி பண்டிகையை இரட்டிப்பு கொண்டாட்டமாக மாற்றும் வகையில், ‘தி ராஜா சாப்’ ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் மகேஷ் அச்சந்தா கூறியதாவது :
“2026 ஆம் ஆண்டில் நான் நடித்து வெளியாகும் முதல் படம் ‘தி ராஜா சாப்’. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய மாருதி அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.
பிரபாஸ் அண்ணா எனக்கு ஒரு டி-ஷர்ட் பரிசாகக் கொடுத்தார். அந்த ஒரு விஷயமே எனக்கு பெரிய சந்தோஷம். அவருக்கும், பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும் நான் என்றும் கடமைப்பட்டவன். இந்த நிகழ்ச்சிக்காக வந்த ரசிகர்களின் கூட்டத்தைப் பார்த்தால், பிரபாஸின் ரசிகர் கூட்டம் எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.”
பாடலாசிரியர் கஸர்லா ஷ்யாம் கூறியதாவது :
“பிரபாஸ் சாருக்காக நான் முதல் முறையாக ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். அந்த பாடல் விரைவில் ஒரு சர்ப்ரைஸாக வெளிவரும். மூன்று கதாநாயகிகளுடன் பிரபாஸ் நடனமாடும் பாடலை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானும் அவர்களுடன் சேர்ந்து காத்திருக்கிறேன்.”
நடிகை ஜரீனா வாஹப் கூறியதாவது :
“நான் கடந்த 40 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். ‘தி ராஜா சாப்’ போன்ற ஒரு நல்ல படத்தில் தெலுங்கில் நடிக்க வாய்ப்பு வழங்கிய பீப்பிள் மீடியா ஃபாக்டரிக்கும், மாருதி காருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் முழு குழுவும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கினார்கள். இந்த படத்தில் பிரபாஸ் உடன் எனக்கு பல காட்சிகள் உள்ளன. நான் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் பிரபாஸ் போல நல்ல மனம் கொண்ட மனிதரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. இந்த படத்தில் அவருடன் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை.”
நடிகர் ரோஹித் கூறியதாவது :
“நான் பாலிவுட்டிலிருந்து வந்தவன். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகே ஒரு யூ-டர்ன் எடுக்கவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. இதுவரை இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. ரெபல் ரசிகர்களுக்கு எனது வணக்கம். பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடிப்பது என்னைப் போன்ற நடிகர்களின் வாழ்க்கைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”
நடிகர் சப்தகிரி கூறியதாவது :
“நான் பிரபாஸ் அண்ணாவுடன் ‘சாலார்’ படத்தில் நடித்தேன். அந்த படத்தின் இடைவேளை காட்சியைப் பார்த்த உடனே, ‘இந்த படம் 2000 கோடி வசூல் செய்யும்’ என்று சொன்னேன் — அது உண்மையாகவே நடந்தது. இப்போது தயாரிப்பாளரின் போனில் ‘தி ராஜா சாப்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். அது வேறு லெவலில் இருக்கிறது. இந்த படமும் நிச்சயமாக 2000 கோடி வசூல் செய்யும். மாருதி சார், நாமெல்லாம் பார்க்க ஆசைப்பட்ட அந்த பழைய ஸ்டைல் பிரபாஸ் அண்ணாவை இந்த படத்தில் காட்டியிருக்கிறார். கையில் பூ வைத்துக் கொண்டு, ரொமான்டிக் தோற்றத்தில் அவர் தோன்றுவது — இனிமேல் பல வருடங்கள் இப்படிப் பார்க்க முடியாத ஒன்று. ஏனெனில் அவர் இப்போது ஆக்ஷன் படங்கள் மட்டுமே செய்து வருகிறார். இந்த படத்தில் நம்மெல்லாரையும் விட பிரபாஸ் அண்ணாதான் அதிகமாகச் சிரிக்க வைப்பார்.
உங்களைப் போல நானும் பிரபாஸ் அண்ணாவைப் பார்க்கத்தான் இன்று இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.”
நடிகை நிதி அகர்வால் கூறியதாவது:
“இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.
‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் காரும், கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் அவர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்.”
இயக்குநர் மாருதி கூறியதாவது:
“இன்று நான் இந்த மேடையில் நின்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவே. ‘தி ராஜா சாப்’ படத்திற்குப் பின்னால் உறுதியாக நின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள் — பிரபாஸ் அவர்களும், விஷ்வ பிரசாத் அவர்களும் தான். விஷ்வ பிரசாத் காரும், பீப்பிள் மீடியா குழுவினரும் இந்த படத்திற்காக தங்களின் உயிரையே கொடுத்தார்கள்.
‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருந்த போது, நான் ‘தி ராஜா சாப்’ கதையை அவரிடம் சொல்லச் சென்றேன். கதையைக் கேட்டவுடன் அவர் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்துச் சிரித்தார். உண்மையில் அவர் இந்த படம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ‘பாகுபலி’க்கு பிறகு பிரபாஸுக்கு உலகளாவிய அடையாளம் கிடைத்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தபோதும் கூட, அங்குள்ள மக்கள் அவரை அடையாளம் கண்டார்கள். அந்த அளவுக்கு ராஜமௌலி சார் உருவாக்கிய பான்–இந்தியா அலை நமக்கு பலன் அளித்து வருகிறது.
இன்று சுகுமார், சந்தீப் வங்கா போன்ற இயக்குநர்கள் அனைவரும் பான்–இந்தியா படங்களை இயக்குகிறார்கள். அதேபோல் நாங்களும் ‘தி ராஜா சாப்’ படத்தை ஒரு பெரிய அளவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் எளிதான ஒன்று அல்ல. இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
நான் இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் பிரபாஸ் காரு என்னை ஒரு பெரிய இயக்குநராக உருவாக்க நினைத்து, ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் என்னைச் சேர்த்தார். நான் இந்த படத்தை இயக்கினேன் என்றாலும், இதன் உண்மையான ஆதாரம் பிரபாஸ் தான். அவர் இந்த படத்திற்கு கொடுத்த அர்ப்பணிப்பு, உழைப்பு, நேரம் – இவை எல்லாவற்றையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.
இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தபோது, பின்னணி இசை சேர்க்கப்பட்ட பிறகு நான் கண் கலங்கினேன். பிரபாஸ் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு காட்சி கூட உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என் வீட்டின் முகவரியை நான் தரத் தயார் — ரசிகர்கள் வந்து நேரடியாக என்னைச் சந்திக்கலாம்.
இந்த சங்கராந்திக்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் ‘தி ராஜா சாப்’ மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.”
தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:
“பீப்பிள் மீடியா ஃபாக்டரி மிகப் பெரிய நட்சத்திரத்துடன் நாம் உருவாக்கிய மிகப் பெரிய படம் இதுதான். ஆரம்பத்தில் பலர் இது ஒரு சிறிய படம் என்று நினைத்தார்கள். ஆனால் ‘தி ராஜா சாப்’ படத்தை உருவாக்க நாங்கள் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். மாருதி சார் சொன்னது போல, இந்த படம் ஒருவரையும் ஏமாற்றாது. உலகளவில் ஹாரர்–ஃபேண்டஸி வகையில் உருவாகும் மிகப் பெரிய படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். இந்த படத்தை நீங்கள் அனைவரும் மனதார ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.”
ரெபல் ஸ்டார் பிரபாஸ் கூறியதாவது:
“என் அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் ஜப்பானில் ரசிகர்களைச் சந்தித்தபோதும் நான் இதே மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்க்கும் போது அதே சந்தோஷம் மீண்டும் வருகிறது. இன்று நான் உங்களுக்காக புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்திருக்கிறேன். அனில் தடானி எனக்கு ஒரு சகோதரரைப் போல. அவர் வட இந்தியாவில் என் படங்களை முழுமையாக ஆதரித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் வந்தாலே அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். இந்த படம் ஒரு பாட்டி – பேரன் கதையாகும். இந்த படத்தில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்தி, மாளவிகா, நித்தி ஆகிய மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர். அவர்கள் மூவரும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் தமன். இப்படிப்பட்ட ஹாரர்–காமெடி படத்திற்கு அவர் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் கார்த்திக் படத்தை மிகவும் அழகாகப் படம் பிடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத். படம் முதலில் திட்டமிட்டதை விட பெரியதாக மாறினாலும், அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த படம் முழுவதும் அவரின் நம்பிக்கையால்தான் உருவானது. மாருதி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்த படத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். அவர் எனக்கு ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் பயிற்சி கொடுத்தவர் போன்றவர். இந்த படத்தை உருவாக்கும்போது அவர் காட்டிய உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் சொல்ல வார்த்தை இல்லை. இந்த படம் ஒரு ஹாரர்–காமெடி. அதே நேரத்தில் அது ஒரு உணர்ச்சி நிறைந்த படம். இந்த படத்தைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள், ரசிப்பீர்கள், மனம் நெகிழ்வீர்கள். இந்த சங்கராந்திக்கு வெளிவரும் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், ‘தி ராஜா சாப்’ ஒரு மிகப் பெரிய வெற்றியாக வேண்டும். நாளை ட்ரெய்லர் வெளியாகிறது – தவறாமல் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”
பிரபல ஹாரர்-காமெடி தொடரான 'காஞ்சனா' சீரிஸின் நான்காம் பாகமான #Kanchana4 படத்தை நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் தீவிர கவனம் செலுத்தி…
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' (2019) விமர்சன…
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி, அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும்…
"‘சிறை’ உண்மையிலேயே ஒரு சிறந்த படம். நிறைய இடங்களில் கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், அவற்றில் நடித்த…
இம்மாதம் முதல் வாரம் தனது நிச்சயதார்த்தம் நடந்ததாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார் ஜூலி. தனது காதலர் முகமது ஜக்ரீம் என்பவரை…