Download App

மணிகண்டன் நடிப்பில் ‘மக்கள் காவலன்’ – மார்ச் மாதம் திரைக்கு!

தை 22, 2026 Published by anbuselvid8bbe9c60f

manikandan

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ‘குடும்பஸ்தன்’ படத்தின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற்ற மணிகண்டன், தொடர்ந்து சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் கதை எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், சாதிய அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பா.ரஞ்சித் தயாரிப்பில் உதவி இயக்குநராக பணியாற்றிய சந்தோஷ் குமாரின் முதல் இயக்க முயற்சி இதுவாகும். படப்பிடிப்பு முழுமையடைந்த நிலையில், தயாரிப்பு குழு மார்ச் மாதத்தில் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மணிகண்டன் தற்போது இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு தயாராகி வருகிறார். இந்தக் கூட்டணி குறித்து திரையுலக வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

‘மக்கள் காவலன்’ படம் மணிகண்டனின் அடுத்தடுத்த வெற்றிகளில் ஒன்றாக அமையும் என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். விரைவில் முதல் லுக், டீசர் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகரின் இன்னொரு சமூக அரசியல் திரைப்படம் – ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம்!

Trending Now