மலையாள சினிமாவின் பிரபல நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார். ஜீப் காட்சி ஒன்றின் போது ஏற்பட்ட இந்த விபத்தில் அவருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக கொச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விநாயகன் ஊடகங்களிடம் பேசிய போது, “என் கழுத்தில் ஒரு நரம்பு பாதிக்கப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்படாவிட்டால், எனக்கு மொபிலிட்டி இழப்பு ஏற்பட்டு பராலிசிஸ் ஆகியிருக்கும்” என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். MRI ஸ்கேன் மூலம் தசை மற்றும் நரம்பு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் 6 வாரங்கள் முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
‘ஆடு’ தொடரின் மூன்றாம் பாகமான இப்படத்தை மிதுன் மானுவல் தாமஸ் இயக்கி வருகிறார். ஜெயசூர்யா மீண்டும் ஷாஜி பப்பன் கதாபாத்திரத்தில் நடிக்க, விநாயகன், விஜய் பாபு, சைஜு குறுப்பு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் வர்மன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டிய விநாயகன், அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் இறந்து போன கதாபாத்திரம் எப்படி திரும்ப வரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், இந்த விபத்து அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
விரைவில் முழு குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்புவார் என ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்தி வருகின்றனர்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…