Download App

48 வயதிலும் குறையாத அழகு: அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடும் மகள்! நெகிழ்ச்சியில் சுரேகா வாணி

மாசி 16, 2026 Published by Natarajan Karuppiah

திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த இவருக்கு தற்போது 48 வயதாகிறது. ஆனால், இன்றும் அதே பொலிவுடனும், இளமையுடனும் வலம் வரும் சுரேகாவை பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயது இருக்கும் என்று சொன்னால் பலரும் நம்ப மறுக்கின்றனர்.

தற்போது தனது மகளுடன் வசித்து வரும் சுரேகா வாணியின் வாழ்க்கையில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்த அவரது மகள் சுப்ரிதா களம் இறங்கியுள்ளார்.

தனது கணவரை இழந்த பிறகு மகளே உலகம் என வாழ்ந்து வரும் சுரேகாவுக்கு, மீண்டும் ஒரு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க சுப்ரிதா திட்டமிட்டுள்ளார். இது குறித்து சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் உருக்கமாகப் பேசியுள்ளார்.

“என் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க நான் ஆசைப்படுகிறேன். எனக்குத் திருமணம் நடப்பதற்கு முன்பே, அம்மாவின் திருமணம் நடக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.” – சுப்ரிதா

இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தனது உறவினர்களிடம் பேசி சம்மதம் வாங்கிவிட்டதாகக் கூறும் சுப்ரிதா, அம்மாவிற்கு வரப்போகும் துணை எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறார்

அம்மாவை மிகவும் அன்பாகப் பார்த்துக் கொள்ளும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும்.அம்மாவின் விருப்பங்களுக்கும் முடிவுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.”என் அப்பாவின் இடத்தை வேறு யாருக்கும் தரக்கூடாது என்று அம்மா நினைக்கிறார், அந்த உணர்வை நானும் மதிக்கிறேன்,” என்று சுப்ரிதா கூறியுள்ளார்.

சுரேகா வாணியும் அவரது மகள் சுப்ரிதாவும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள். இருவரும் இணைந்து பதிவிடும் நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எப்போதும் வைரலாகும். தற்போது, ஒரு மகளாக தனது தாயின் எதிர்காலத்தைப் பற்றி சுப்ரிதா எடுத்துள்ள இந்த முதிர்ச்சியான முடிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தாயின் தனிமையைப் போக்கி, அவருக்கு ஒரு நிம்மதியான வாழ்வை அமைத்துக் கொடுக்கத் துடிக்கும் மகளின் இந்த அன்பு, பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.