பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரன்வீர் சிங், தனது சமீபத்திய அதிரடித் திரைப்படமான ‘துரந்தர்’ (Dhurandhar) படத்தின் பிரம்மாண்ட வெற்றியைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்கு மர்ம நபர்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று (பிப்ரவரி 9, 2026), ரன்வீர் சிங்கின் உதவியாளர் அல்லது செயலாளரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரிடமிருந்து குரல் செய்தி (Voice Note) வந்துள்ளது. அதில், ரன்வீர் சிங்கிடம் பல கோடி ரூபாய் (சுமார் ₹10 கோடி எனத் தகவல்) பிணைத் தொகையாகக் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பணம் தராவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அந்தச் செய்தியில் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த மிரட்டலுக்குப் பின்னால் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருக்கலாம் என மும்பை காவல்துறை சந்தேகிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகர் சல்மான் கான் மற்றும் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆகியோருக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்களின் தொடர்ச்சியாக இது பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி ரோகித் ஷெட்டியின் வீட்டின் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது ரன்வீர் சிங்கிற்கு மிரட்டல் வந்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் குறித்து ரன்வீர் சிங் தரப்பிலிருந்து மும்பை காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து. மத்திய மும்பையில் உள்ள ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆறுக்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய தனியார் பாதுகாவலர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மும்பை குற்றப்பிரிவு (Crime Branch) போலீசார் இந்த மிரட்டல் வந்த எண்ணை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நடிகர் ரன்வீர் சிங்கின் வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிற மக்கள் சற்றே கவலையடைந்துள்ளனர். பொதுவான இடங்களான ஜிம், லிப்ட் மற்றும் விளையாட்டு மைதானங்களில் ஆயுதமேந்திய காவலர்கள் நடமாடுவது தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாக அவர்கள் தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.
ரன்வீர் சிங் தற்போது தனது அடுத்த படமான ‘துரந்தர் 2’ (Dhurandhar: The Revenge) ரிலீஸிற்காகக் காத்திருக்கிறார். மிரட்டல் விடுத்த நபர்களைப் பிடிக்க மும்பை போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…