நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்‘ (ஜனவரி 9, 2026 வெளியீடு) தணிக்கை பணிகளில் சிக்கியுள்ளது. சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட படத்தை பார்த்த CBFC அதிகாரிகள், பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளை குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சில அறிக்கைகளின்படி, சுமார் 64 கட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், படம் ‘A’ சான்றிதழ் பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன. இந்த மாற்றங்களை செய்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் இன்றுடன் (டிசம்பர் 29) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், டிசம்பர் 31 இரவு புத்தாண்டு கொண்டாட்டமாக ‘ஜனநாயகன்‘ டிரெய்லரை வெளியிடலாம் என படக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஒளிப்பதிவு: சத்யன் சூரியன், இசை: அனிருத் ரவிச்சந்தர்.
விஜய்யின் இறுதிப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், தணிக்கை சிக்கல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…