தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் இதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு (சிலம்பரசன்) நடித்து வரும் ‘அரசன்‘ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நிறைவடைந்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெற உள்ளது. ‘அரசன்’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த திட்டம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசனை வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் கூட்டணி உறுதியானால் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியானதில் இருந்து, பலரும் இந்தக் கூட்டணிக்காக காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரசிகர்கள் இந்த ட்ரீம் கூட்டணிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…