தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இணையும் புதிய படம் குறித்த பேச்சுவார்த்தை தற்போது தீவிரமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் இதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இது தொடர்பான சந்திப்புகள் நடைபெற்றுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு (சிலம்பரசன்) நடித்து வரும் ‘அரசன்‘ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நிறைவடைந்துள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் அரங்குகளில் நடைபெற உள்ளது. ‘அரசன்’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறனின் அடுத்த திட்டம் என்ன என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில், கமல்ஹாசனை வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தக் கூட்டணி உறுதியானால் தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியானதில் இருந்து, பலரும் இந்தக் கூட்டணிக்காக காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் தற்போது அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ரசிகர்கள் இந்த ட்ரீம் கூட்டணிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்!
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.
இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, பாரம்பரியம் மற்றும் சாதனைகளை…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில்…
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா (84)…
தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும்…