தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, பாபி தியோல், மமிதா பைஜூ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் உருவான இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். விஷால் மிஷ்ரா மற்றும் அனிருத் பாடியுள்ள இந்த மாஸ் ஆன்தம், வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.
பாடலில் இடம்பெற்றுள்ள “ஒரு பேரே வரலாறு… அந்தப் பேரைச் சொன்னால் அதிரும் ஊரு”, “நம்ம மக்கள் நினைக்காம, ஒரு மாற்றம் பிறக்காது” போன்ற வரிகள் விஜய்யின் மாஸ் இமேஜையும், அவரது அரசியல் பயணத்தையும் முன்னிறுத்தும் வகையில் அமைந்துள்ளன. லிரிக்கல் வீடியோவில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஜய்யின் முந்தைய படங்களின் காட்சிகளை இணைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.
ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ 75 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற நிலையில், இந்த இரண்டாவது பாடலும் விஜய்-அனிருத் கூட்டணியின் மேஜிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாடலை கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகும் ‘ஜனநாயகன்’ 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…