உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய பயோபிக் திரைப்படம் உருவாகவுள்ளது. இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ போன்ற படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய் பல்லவியும் இதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், அந்த நட்பின் காரணமாகவே இந்த அணுகல் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
திரைக்கதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி (1916-2004) தனது ஏழு தசாப்தங்களுக்கும் மேலான இசைப் பயணத்தில் உலக அரங்குகளில் இந்திய கர்நாடக இசையை பரப்பியவர். ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியக் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சாய் பல்லவி தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வரும் நிலையில், இந்த பயோபிக் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை…
திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன்,…
சில கதைகள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே இருக்கும். ஆனால் ‘வடம்’ அதைவிட ஆழமான அனுபவமாக மாறுகிறது அது பார்வையாளர்களை முழுமையாக…
தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பார்த்திபன், தான் "சாதி இல்லை, மதம் இல்லை" (No Caste,…
மறைந்தாலும் தனது குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு, கேரள மாநிலம்…