உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய பயோபிக் திரைப்படம் உருவாகவுள்ளது. இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ போன்ற படங்களை இயக்கிய கெளதம் தின்னூரி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சாய் பல்லவியும் இதற்கு ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே ‘தண்டேல்’ படத்தில் சாய் பல்லவியுடன் இணைந்து பணியாற்றியுள்ள நிலையில், அந்த நட்பின் காரணமாகவே இந்த அணுகல் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
திரைக்கதை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி (1916-2004) தனது ஏழு தசாப்தங்களுக்கும் மேலான இசைப் பயணத்தில் உலக அரங்குகளில் இந்திய கர்நாடக இசையை பரப்பியவர். ஐ.நா. சபையில் பாடிய முதல் இந்தியக் கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
சாய் பல்லவி தற்போது ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்து வரும் நிலையில், இந்த பயோபிக் அவரது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…