நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தனது திரைப் பயணத்தில் 1999-ல் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் தனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சமீபத்தில் மனம் திறந்துள்ளார். மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
‘படையப்பா’ திரைப்படத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, மறக்க முடியாத வில்லி கதாபாத்திரமான நீலாம்பரி குறித்து ரஜினிகாந்த் பேசியதாவது:
“நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு நடிகை ஐஸ்வர்யா ராய்தான் சரியானவர் என்று நினைத்தேன். அவர் அப்போது பிஸியாக இருந்ததால், அவரது கால்ஷீட்டுக்காக கிட்டத்தட்ட 3 முதல் 4 மாதங்கள் வரை அலைந்தோம். உறவினர்கள் மூலமும் முயற்சித்தோம். அவருக்கு கதை பிடித்தால் 2-3 ஆண்டுகள் காத்திருந்து கூட ஷூட்டிங்கைத் தொடங்கலாம் என்று நான் தீர்மானித்தேன். பின்னர் அவருக்கு விருப்பமில்லை எனத் தெரிந்ததால், அந்த முயற்சியை நாங்கள் கைவிட்டோம்.”
தான் நடித்துள்ள பல படங்கள் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகி வரும் நிலையில், ‘படையப்பா 2’ குறித்து பேசிய ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார்.
“‘2.0′, ‘ஜெயிலர் 2′ என இரண்டாம் பாகப் படங்கள் பண்ணும்போது, ஏன் ‘படையப்பா 2’ பண்ணக்கூடாது என்று தோன்றியது. ‘அடுத்த ஜென்மத்துலயாவது நான் உன்னை பழிவாங்காம விடமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போனாள் நீலாம்பரி. அதனால், ‘நீலாம்பரி: படையப்பா 2’தான் டைட்டில். அதற்கான கதை விவாதம் தற்போது தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது. கதை நன்றாக வந்தால் ரசிகர்களுக்கு அது ஒரு பெரிய திருவிழாவாக இருக்கும்.”
‘படையப்பா’ திரைப்படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும், ரஜினிகாந்தின் இந்தக் கருத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நீலாம்பரியின் பழிவாங்கும் படலத்தை மையமாகக் கொண்ட ‘நீலாம்பரி: படையப்பா 2’ உருவாகும் பட்சத்தில், அது நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரம்மாண்ட படைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.