இளையராஜா – யுவன் இணைந்து பாடிய முதல் பாடல்: ‘கொம்புசீவி’யில் வரலாற்று தருணம்!
கார்த்திகை 18, 2025 Published by Natarajan Karuppiah

தமிழ் சினிமாவின் இசை மாயவித்தைக்காரர்கள் இளையராஜாவும், அவரது மகனும் இசை அரசனுமான யுவன் ஷங்கர் ராஜாவும் ஒரு பாடலுக்கு ஒன்றாக குரல் கொடுத்திருக்கிறார்கள் என்கிற செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இது இருவரும் முதல் முறையாக ஒரே பாடலில் பாடியிருக்கும் அபூர்வமான தருணம்!
பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ‘கொம்புசீவி’. நடிகர் சரத்குமார் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் இசை அமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா பணியாற்றுகிறார்.

இப்படத்தின் ஒரு முக்கியமான பாடலுக்கு தந்தை இளையராஜாவும், மகன் யுவனும் இணைந்து பாடியிருப்பது திரைப்படத்தின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. இளையராஜாவின் கம்பீரமான குரலும், யுவனின் இளமையான உணர்வும் கலந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இசை ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறது.

‘கொம்புசீவி’ படத்தின் மூலம் தந்தை-மகன் ஜோடி ஒரே திரையில் (குரலில்) இணைவதால், இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல, தமிழிசை வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கப்போகும் பாடலாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விரைவில் பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இசைப் பிரியர்கள் “இளையராஜா + யுவன் = மேஜிக்!” என்று கொண்டாட்டக் காத்திருக்கிறார்கள்!
















