‘லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் நடிகர்-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIK) படத்தை முடித்துவிட்டார். இப்படம் வெளியீடு தாமதமடைந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்குநர் கதிரையில் அமர்ந்து, தானே நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
இப்படம் சயின்ஸ் பிக்ஷன் பாணியில், ஆக்ஷன் கலந்த கதைக்களத்துடன் உருவாகவுள்ளது. படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக படமாக்கி முடித்து, 2026 இறுதியில் திரையரங்குகளில் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு நாயகியாக நடிக்க மீனாட்சி சவுத்ரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழ்-தெலுங்கு இருமொழி ரொமாண்டிக் என்டர்டெய்னராக உருவாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘லவ் டுடே’வுக்குப் பிறகு பிரதீப் இயக்கி நடிக்கும் படம் என்பதால், இது அவரது கேரியரில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது!
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…