தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் அபிமான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது கோலிவுட்டில் பிசியாக உள்ளார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து, பாக்ஸ் ஆபீஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது ரன்பீர் சிங், யாஷ் நடிப்பில், நீதி மோகன் இயக்கும் பிரம்மாண்ட ‘ராமாயணா’ படத்தில் சீதாதேவியாக நடித்து வரும் சாய் பல்லவிக்கு, அடுத்த தமிழ் ப்ராஜெக்ட் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி, அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து இயக்கவுள்ள படம்தான் தற்காலிகமாக D55 என அழைக்கப்படும் ப்ராஜெக்ட். இந்தப் படத்திற்கு இன்னும் அதிகாரப்பூர்வ தலைப்பு அறிவிக்கப்படவில்லை. படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகியாக சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘அமரன்’ படத்தில் ராஜ்குமார் பெரியசாமி – சாய் பல்லவி கூட்டணி அபாரமாக அமைந்த நிலையில், மீண்டும் அதே இயக்குநருடன் சாய் பல்லவி இணைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இதற்கு முன்பு 2019-ல் வெளியான ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார் என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் – சாய் பல்லவி – ராஜ்குமார் பெரியசாமி என மூன்று பேரும் ஒரே படத்தில் மீண்டும் இணைவார்களா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.