மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.
வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி வருகிறார். அவரது கடும் பார்வை அந்த குழப்பத்தை துளைத்துச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளது. முழு காட்சியும் இருள் மிகுந்த வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு, போராட்டம், எதிர்ப்பு மற்றும் கலக்கம் நிறைந்த உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது.
‘பெத்தி’ படத்தின் விளம்பர உள்ளடக்கங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல் க்ளிம்ப்ஸ், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் A.R.ரஹ்மான் இசையமைத்த “சிக்கிரி சிக்கிரி” பாடல் அனைத்து தளங்களிலும் அபார வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடல் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதுடன், பல சாதனைகளை முறியடிக்கும் பாதையில் பயணித்து வருகிறது.
படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் உயர்த்தும் வகையில், நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளதுடன், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம் சரண், இதுவரை காணாத முற்றிலும் புதிய கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் தோன்றுகிறார்.
வெங்கட சதீஷ் கிலாரு, தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ‘பெத்தி’ படத்திற்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பக் குழு இணைந்துள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற A.R.ரஹ்மான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் R.ரத்னவேலு காட்சிகளைப் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத்தொகுப்பை கவனிக்க, அவிநாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பின் மூலம் படத்தின் உலகத்தை அழகாக உருவாக்கியுள்ளார்.
‘பெத்தி’ திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும், பான் இந்திய அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…