நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் வரும் 2026 ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதியாகியுள்ளது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் OTT மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருந்ததால் வெளியீட்டுத் தேதி குறித்து குழப்பம் நிலவியது. தற்போது அந்த இடைவெளி நிரம்பியுள்ளது.
என இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளன.
இரு உரிமைகளும் முழுமையாக விற்பனையானதைத் தொடர்ந்து, ஜனவரி 23-ம் தேதி திரைக்கு வருவது உறுதியானது. குறிப்பாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சூர்யாவின் அடுத்த படமான வெங்கி அட்லுரி இயக்கும் திரைப்படத்தின் OTT உரிமையையும் ஏற்கெனவே வாங்கியுள்ளதால், ‘கருப்பு’ படத்தை ஜனவரி 23-க்குள் வெளியிட்டால்தான் மே மாதத்தில் அந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியும் என்பதால், தேதியை மாற்ற விருப்பமில்லை என்று தெரிகிறது.
விரைவில் “ஜனவரி 23 – கருப்பு வருகிறான்!” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ப்ரோமோஷன் பணிகள் துரிதமாகத் தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் த்ரிஷா, நடிகை நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் ‘கருப்பு’, 2026-ன் தொடக்கத்தில் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…
திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…
திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…
தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த…