நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் ‘கருப்பு’ திரைப்படம் வரும் 2026 ஜனவரி 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதியாகியுள்ளது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வரும் இப்படத்தின் OTT மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருந்ததால் வெளியீட்டுத் தேதி குறித்து குழப்பம் நிலவியது. தற்போது அந்த இடைவெளி நிரம்பியுள்ளது.
என இரு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளன.
இரு உரிமைகளும் முழுமையாக விற்பனையானதைத் தொடர்ந்து, ஜனவரி 23-ம் தேதி திரைக்கு வருவது உறுதியானது. குறிப்பாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சூர்யாவின் அடுத்த படமான வெங்கி அட்லுரி இயக்கும் திரைப்படத்தின் OTT உரிமையையும் ஏற்கெனவே வாங்கியுள்ளதால், ‘கருப்பு’ படத்தை ஜனவரி 23-க்குள் வெளியிட்டால்தான் மே மாதத்தில் அந்தப் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியும் என்பதால், தேதியை மாற்ற விருப்பமில்லை என்று தெரிகிறது.
விரைவில் “ஜனவரி 23 – கருப்பு வருகிறான்!” என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ப்ரோமோஷன் பணிகள் துரிதமாகத் தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவுடன் த்ரிஷா, நடிகை நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாராகி வரும் ‘கருப்பு’, 2026-ன் தொடக்கத்தில் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஃபேண்டஸி மற்றும் காமெடி கலந்த திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், கடந்த 2017-ஆம்…
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.