“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
வைகாசி 23, 2026 Published by Natarajan Karuppiah

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘கருப்பு’. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இன்று சென்னையில் ‘கருப்பு சக்சஸ் மீட்’ (Success Meet) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூர்யா, படம் உருவான விதம் மற்றும் தனக்கு கிடைத்த தியேட்டர் ரெஸ்பான்ஸ் குறித்து பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசிய சூர்யா:
“இந்த மாபெரும் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நேரில் வந்து நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆர்.ஜே.பாலாஜி இந்த கதையை என்னிடம் சொன்னபோது, இதில் நடிக்க வேண்டும் என்ற முடிவை வெறும் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்திலேயே எடுத்துவிட்டேன். அந்த அளவிற்கு கதையில் எல்லாமே சரியாக அமைந்திருந்தது.”

படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியைப் பாராட்டிய சூர்யா, “இந்த படம் முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜியின் விஷன்தான். அவர் கதையை விவரிக்கும் போதே, இது தியேட்டரில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தையும், ரெஸ்பான்ஸையும் பெறும் என்ற நம்பிக்கை எனக்குள் பிறந்தது. நாம் ஒவ்வொரு படத்தையும் ஒரு நம்பிக்கையில்தான் தொடங்குகிறோம். அதேபோல், முதல் மீட்டிங்கில் இருந்தே இந்த படத்தில் எல்லாமே பாசிட்டிவாக, நன்றாக அமைந்தது” என்று கூறினார்.

படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த சூர்யா, “இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வர அவர்கள்தான் முக்கிய காரணம். மேலும், அனைத்து முடிவுகளையும் சரியாக எடுக்க வைத்த அந்த ‘கருப்ப சாமிக்கு’ என் நெஞ்சார்ந்த நன்றி. இந்த படம் தியேட்டரில் இப்படி ஒரு மேஜிக் நிகழ்த்த வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், அது இன்று நடந்திருக்கிறது” என்றார்.
நான் எதிர்பார்த்ததை விட மிகப்பாரிய வெற்றியை இந்த படம் கொடுத்துள்ளது. சமீப காலங்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் இப்படி கொண்டாடுவதை (Reaction) நான் பார்த்ததே இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி, மற்ற மாநிலங்களிலும், உலகளவிலும் இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களுடனும் மிகச்சிறப்பாக கனெக்ட் ஆகியிருக்கிறது” என சூர்யா மகிழ்ச்சியுடன் பேசினார்.

‘கருப்பு’ படத்தின் இந்த அதிரடி வெற்றி, படக்குழுவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.















