சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்தப் படம், வரும் மே 14, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “#Karuppu – 14-05-2026. Blockbuster summer begins !!!” என பதிவிட்டு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாகும் என பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்த பாலாஜி, தற்போது கோடை விடுமுறையை குறிவைத்து தேதியை அறிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும், த்ரிஷாவும் இணைந்து நடிப்பதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தில் சூர்யா ‘சரவணன்’ (அவரது இயற்பெயர்) என்ற பெயருடைய வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘ஜெய் பீம்’, ‘விக்ரம்’ போன்ற படங்களுக்குப் பிறகு சூர்யாவின் 45-வது படமாக இது உருவாகியுள்ளது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், ஸ்வாசிகா, இந்த்ரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கருப்பு’ திரைப்படம் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யாவின் அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ (வெங்கி அட்லூரி இயக்கம்) ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரே மாத இடைவெளியில் சூர்யாவின் இரண்டு படங்களை திரையில் காண ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 'சிவா மனசுல சக்தி' (SMS) என்ற பிளாக்பஸ்டர் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் ஜீவா…
இயக்குநர் மணிரத்னம் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், முதல்முறையாக விஜய் சேதுபதி மற்றும் சாய்…
‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது.
காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ்…
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தற்போது 'விடாமுயற்சி' மற்றும் 'குட் பேட் அக்லி' ஆகிய திரைப்படங்களில் பிஸியாக…
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின்…