நடிகர் ஆர்யா தனது திரைப் பயணத்தின் 40-வது படத்தைத் தொடங்கியுள்ளார். இந்தப் புதிய திரைப்படத்துக்கான பூஜை விழா நேற்றுகோலாகலமாக நடைபெற்றது.
இந்தப் படத்தை மலையாளத் திரையுலகைச் சேர்ந்த நிகில் முரளி இயக்குகிறார். இவர் இதற்கு முன்னர் 2023-ல் வெளியாகி கவனம் ஈர்த்த ‘ப்ரணயவிலாசம்’ என்ற படத்தை இயக்கியவர்.
படத்துக்கு இசைப் புயல் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.ஆர்யாவின் மனைவி மற்றும் நடிகையுமான சயீஷா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’, ‘மின்மினி’ போன்ற தரமான படங்களை இயக்கியதன் மூலம் அறியப்பட்ட இயக்குநர் ஹலிதா ஷமீம், இந்தப் படத்துக்கான வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார்.
இந்த முக்கியக் கூட்டணி இணைந்திருப்பதால், ஆர்யாவின் 40-வது படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஆதித்யா தார் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar: The Revenge)…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா. ரஞ்சித், தனது தனித்துவமான கதைக்களத்தால் எப்போதும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால்,
தன்னுடைய முதல் படமான 'தி லெஜெண்ட்' படத்திற்குப் பிறகு, லெஜெண்ட் சரவணன் மீண்டும் திரையுலகை அதிரவைக்கத் தயாராகிவிட்டார்.
மலையாளத் திரையுலகின் பிரம்மாண்ட வெற்றிக் கூட்டணியான மோகன்லால் - ஜீத்து ஜோசப் இணைப்பில் உருவாகியுள்ள ‘திரிஷ்யம் 3’ படத்தின் ரிலீஸ்…
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 'துரந்தர்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக…