விற்பனைக்கு வரும் 125 வருடங்கள் பழமையான சாக்லேட்!.

125 ஆண்டுகளுக்கு முன் விக்டோரியா மகாராணியால் போர்வீரர்களுக்கு அனுப்பப் பட்ட  சாக்லேட் பெட்டி ஒன்று வரும் ஜூன் மாதம் பிரிஸ்டோலில் ஏலம் விடப் படவுள்ளது- அதன் மதிப்பு 400பவுன் வரை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில வெள்ளிக் காகித உறையின் துண்டுகளுடன் அதே பெட்டியில் மிச்சமிருக்கும் சாக்கேல்ட் 1900 ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவில் போயர் போரில் ஈடுபட்டிருந்த பிரிட்டிஷ் படைக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்று பிரிஸ்டோலில் உள்ள ஏல முகவர் கருத்து தெரிவித்தார்.

இந்த ஏல முகமையைச் சேர்ந்த இராணுவ நிபுணரான லூசி மெக்கொர்ட் , ”1900களில் இது  கிடைக்கவே கிடைக்காத இனிப்பாக இருந்திருக்கும்.  இதை சாப்பிடாமல் வைத்திருந்தவரின் மன உறுதியை நான் பாராட்டுகிறேன்” என்றார் வேடிக்கையாக..!

1899 ஆம் ஆண்டு சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்களான  ஜே எஸ் ஃப்ரை அண்ட் சன்ஸ், கேட்பரி ப்ரதர்ஸ் லிமிடெட் மற்றும் ரவுண்ட்ரீ அண்ட் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றிற்கு மகாராணி இந்த சிறப்பான சாக்லேட் பெட்டிகளை செய்வதற்காக ஆர்டர் கொடுத்தார்” என்றும் இந்த ஏலமுகவர்கள் குறிப்பிட்டனர்.

சாக்லேட் பெட்டிகளின் மீது “புத்தாண்டு நல் வாழ்த்துகள்” என்ற வார்த்தைகள் பொறிக்கப் பட்டிருந்தன. 1900 ஆண்டின் முடிவிற்குள் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் வீரர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டிருந்தன.

ஏலமுகவர் ஆண்டி ஸ்டோவ் இதன் தோற்றம் பற்றி கூறுகையில்,” இதை நான் சாப்பிட மாட்டேன். ஆனால், அதன் வயதை கவனத்தில் கொள்ளும் போது அது நன்றாக இருப்பதாகத் தான் தோன்றுகிறது.” என்றார்.

அந்த சாக்லேட்டுகளில் பெரும்பாலானவை உடனடியாக தின்னப் பட்டிருக்கும். சில வீட்டிற்கோ அல்லது காயமடைந்த வீரர்கள் இருக்கும் மருத்துவமனைக்கோ அனுப்பப் பட்டிருக்கும்.

” இது கிடைப்பதற்கரிதான பழம்பொருள்” என்று கூறிய ஸ்டோவ், “ இந்த பெட்டி வாழ்ந்து முடித்த 125 வருடங்களில்  சில போர்களைக் கண்டிருக்கும். ஒருவேளை ஓரிரு முறை அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி அங்கும் இங்கும் போய் வந்திருக்கும்” என்று குறிப்பிட்டார்.

250 பவுண்ட் முதல் 400 பவுண்ட் வரை  ஏலம் விடப்படலாம் என்று  எதிர்பார்க்கப் படுகிற இந்த சாக்லேட் பார் “வரலாற்று சிறப்புமிக்கப் பொருளை வேண்டுபவர்களைக் கவரலாம் அல்லது நண்பர்களை விருந்துக்கு அழைத்து பெருமையடிக்க விரும்புபவர்களையும் ஈர்க்கலாம். இராணுவப் பொருட்களை விரும்பி சேகரிப்பவர்களும் இதை வாங்கலாம். அதனால், இது பரவலாக விரும்பப்படும் பொருளாகத் தான் இருக்கிறது “என்றார் அவர்.

 

anbuselvid8bbe9c60f

Share
Published by
anbuselvid8bbe9c60f

Recent Posts

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’: படப்பிடிப்பு நிறைவு – டீசர் தேதியை அறிவித்தது படக்குழு!

திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

17 hours ago

ஜெயிலர் 2-ல் நோரா பதேஹி சிறப்பு குத்துப் பாடல்: ‘காவாலா’வை மிஞ்சுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…

18 hours ago

சண்முக பாண்டியன் – மித்ரன் ஜவஹர் கூட்டணி: ‘கொம்புசீவி’க்கு பிறகு புதிய படம் உறுதி!

நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…

18 hours ago

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்: சாய் பல்லவி நடிக்கவுள்ளாரா? பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்!

உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…

18 hours ago

ஜனநாயகன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியீடு: ரசிகர்கள் கொண்டாட்டம்!

தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…

18 hours ago

சூர்யாவின் ‘ஹாட்ரிக்’ கொண்டாட்டம்: 2026-ல் வரிசைகட்டும் மெகா திரைப்படங்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.

22 hours ago