சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமார், நடிப்புக்கு அப்பால் கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்தத் தொடரில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடந்த 12 மணி நேர கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். இவர் ரேஸில் கலந்துகொள்வதைக் கேள்விப்பட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டிருந்தனர்.
விளையாட்டு மீதான தனது அர்ப்பணிப்புக்கு இடையே, தனது ரசிகர்களின் பாசத்தைப் புரிந்துகொண்ட அஜித், அவர்கள் அனைவருடனும் பொறுமையாக தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார். “மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுப் போட்டியின் சூழலைப் புரிந்துகொண்டு, மற்றவர்கள் பாதிக்காத வண்ணம் ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற தனது எண்ணத்தை அஜித் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இந்த பொறுப்புணர்வு மிகுந்த வேண்டுகோள் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
'அமரன்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) நிறுவனம்…
திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சுரேகா வாணி
JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான…
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மிருணாள் தாகூர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற செய்தி காட்டுத்தீயாய்…
திரையுலகில் ஒரு இயக்குநராகவும், தொழில்நுட்பக் கலைஞராகவும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
இந்திய இசையுலகின் அடையாளமாகத் திகழ்ந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க நீண்ட காலமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு…