சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் குமார், நடிப்புக்கு அப்பால் கார் மற்றும் பைக் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் போன்ற நாடுகளில் நடைபெற்ற ரேஸ்களில் பங்கேற்ற அவர், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்.
இந்தத் தொடரில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி நடந்த 12 மணி நேர கார் ரேஸில் அஜித் பங்கேற்றார். இவர் ரேஸில் கலந்துகொள்வதைக் கேள்விப்பட்ட 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக அங்கு திரண்டிருந்தனர்.
விளையாட்டு மீதான தனது அர்ப்பணிப்புக்கு இடையே, தனது ரசிகர்களின் பாசத்தைப் புரிந்துகொண்ட அஜித், அவர்கள் அனைவருடனும் பொறுமையாக தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது, அஜித் தன் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார். “மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுப் போட்டியின் சூழலைப் புரிந்துகொண்டு, மற்றவர்கள் பாதிக்காத வண்ணம் ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்ற தனது எண்ணத்தை அஜித் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய இந்த பொறுப்புணர்வு மிகுந்த வேண்டுகோள் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…
சென்னையின் பல்லாவரம் மண்ணில் தொடங்கிய இரு வெற்றிப் பயணங்கள்… இனி வளர்ச்சியை நோக்கி ஒரே பாதையில்! சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு…
தமிழ் சினிமாவில் வடிவேலுவின் காம்போவில் வந்து நம்மையெல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்த மூத்த நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்…
தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடியெடுத்து வைத்த தொழில்அதிபர் லெஜண்ட் சரவணன்,
தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகருக்கு, மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி வழங்கும்…
இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.